நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் அன்றாட வேலைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்த நிலையில் மலையகத்தில் தொடர்ந்து நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
அத்துடன் இன்று காலை முதல் மலையக பகுதிகளில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுவதால் சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர்குறிப்பாக ஹட்டன் – நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு மார்க்கத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் முன்விளக்குகளை எரியவிட்டு அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.