திருமணமாகி எட்டு மாதங்களில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண்

இந்தியாவின் பெங்களூர் நகரத்தில், சவுகான் எனும் நபர், இரண்டாயிரம் ரூபா பணத்திற்காக தனது மனைவியை எரித்துக்கொலை செய்துள்ளார். கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த சவுகான் பூஜா தம்பதியினருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் தான் திருமணமாகியுள்ளது.

திருமணமான நாள் முதலே இவர்களிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

1-3

இந்நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்ற வேளை, வீட்டில் இருந்த இரண்டாயிரம் ரூபாவினை காணவில்லை என்று தனது மனைவியுடன் சவுகான் சண்டையிட்டுள்ளார்.

மாமியாரும் பூஜாவிடம், நீ தான் பணத்தை எடுத்துள்ளாய் என கூறியுள்ளார். பிரச்சினை அதிகமாகவே கணவரும், மாமியாரும் சேர்ந்து பூஜாவை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர்.

பூஜாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அயலவர்கள், பூஜாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பூஜாவின் கணவரும், மாமியாரும் தலைமறைவாகியுள்ளனர். பொலிஸார் இவர்களை தேடி வருகின்றனர்.