விஜயை வைத்து தெறி என்ற ஹிட் படத்தைக் கொடுத்த அட்லீ மீண்டும் விஜய்யுடன் இணைந்திருக்கும் படம்தான் மெர்சல் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், சுந்தர் சி, பார்த்திபன் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அட்லீ பேசியபோது,
ஒருத்தன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதைவிட எவ்வளவு பேரை சம்பாதிக்கிறான் என்பது முக்கியம். உங்களுடைய கைதட்டல்களை சம்பாதித்துள்ளதில் சந்தோஷம்.
உருவாவதற்கு ஒரே ஒருவர்தான் காரணம். எனது அண்ணன் தளபதி விஜய் சார் மட்டுமே. அவரோடு நெருங்கிப் பணிபுரிந்து வருவதால் எனக்கு உங்களை எல்லாம் விட இன்னும் நன்றாகத் தெரியும். இதுவரை என் வாழ்க்கையில் பார்த்த மனிதர்களில் மிகவும் நல்ல மனிதர். அவரால் தான் கிடைத்தது. அதற்கு அவருக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.
இந்தப் படத்துக்கு அதிகமான உழைப்பு தேவைப்பட்டது. ஏனென்றால் தெறி மாதிரி ஒரு படம் செய்துவிட்டு அதைத் தாண்டி ஒரு படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்.
சண்டைக்காட்சிகள் இருந்தது என்றால் இதில் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. அனைத்து விஷயங்களிலுமே ஒரு பெரிய உழைப்பு தேவைப்பட்டது. அதற்கு விஜய் அண்ணாவுக்கு நன்றி.
விஜய் அண்ணாவின் முழுமையான முயற்சியை மெர்சல் படப்பிடிப்பில் பார்த்தேன். ராஜஸ்தானில் ஏப்ரலில் படப்பிடிப்பு நடைபெற்ற போது 50 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டியது. அத்தகைய வெயிலை சமாளிப்பது அந்த ஊர்க்காரர்களுக்கே கடினம். அந்த இடத்தில் திறந்தவெளி மைதானத்தில் பேரோடு விஜயை வைத்து படப்பிடிப்பு செய்தேன். அவரைப் போன்றதொரு நடிகரைப் பார்த்ததில்லை.
அவர் நினைத்தால் மாஸாக வசனம் பேசிப் போய்விடலாம். அதைத் தாண்டி ஏதாவது
திருப்திப்படுத்த வேண்டும் என்று அவருடைய மனதில் இருக்கிறது. இவற்றை எல்லாம்விடவது நாள் விழாவில் இன்னும் நிறைய சொல்கிறேன். ராமநாராயணன் சார் நிறுவனத்தின் வது படத்துக்கு என்னால் எவ்வளவு உழைப்பு தர முடியுமோ தர வேண்டும் என நினைத்தேன். முரளி சாரைப் போன்றதொரு தயாரிப்பாளரை இனிமேல் சந்திப்பேனா என்று தெரியவில்லை.
அதே போன்று முதல் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் சாரோடு பணிபுரிய வேண்டும் என்று பேப்பரிலேயே எழுதிக் கொண்டிருந்தேன். அது வது படத்திலேயே அமைந்திருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.
கதாநாயகிகள் இருக்கின்றனர். வடிவேலுவின் கதாபாத்திரம் உணர்ச்சிகரமானதாக இருக்கும். மணிவண்ணன் சாரைப் போல அட்டகாசமாக நடித்திருக்கிறார். தமிழர்களின் அடையாளம் பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றியே படத்தின் கதை இருக்கும்’’ என்று வழக்கம்போலவே உருகியே பேசினார்.