இராணுவத்தின் 28ஆவது பிரதி பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ பதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் 28ஆவது பிரதி பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ நேற்று (17) பதவியேற்றார்.

newdcos_1

இராணுவத்தின் முன்னாள் பிரதி பதவிநிலை பிரதானியான மேஜர் ஜெனரல் ரேணக வி உடவத்தவின் பதவிக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தியத்தலாவை இராணுவ கெடெட் அதிகாரிகள் அக்கடமியில் 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி , 18 ஆவது இராணுவ அதிகாரிகள் பயிற்றுவிப்பு பிரிவில் இணைந்துள்ளார்.

521ஆவது இராணுவப் படைப் பிரிவில் பிரிகேட் மேஜர் ஆகவும், இராணுவ உளவியல் நடவடிக்கையின் பணிப்பாளராகவும், இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளராகவும், இராணுவ நடவடிக்கைகள் பணியகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

5ஆவது மற்றும் 8ஆவது இலங்கை இராணுவ கெமுனு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியாகவும், 533 மற்றும் 512ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாகவும், 23 , 65 மற்றும் 54ஆவது படைத் தலைமையகங்களின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும், முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்தின் தளபதியாகவும் கடமையாற்றியதுடன் தற்போது இராணுவத்தின் பிரதி பதவிநிலை பிரதானியாக கடமையேற்றுள்ளார்.