நல்லூர் கந்தனின் திருமஞ்சத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் பத்தாம் நாள் திருமஞ்சத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய குறித்த திருவிழா இன்று எட்டாம் நாளாக தொடர்ந்து நடைபெறுகின்றது.

இவ்வாறு தினம் தோறும் நடைபெறும் கந்தனின் சிறப்பு பூஜைகள் மற்றும் வெளி வீதியுலா தரிசனத்தை காண நாள் தோறும் பெருந்திரளான மக்கள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினமும் நல்லையம்பதியானின் திருவருளைப் பெற்றுக்கொள்ள பெருமளவிலான மக்கள் திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது