9 மாதங்களில் 2200 பேர் வீதி விபத்துக்களினால் மரணம்.!

இலங்கையில் இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் 2200 பேர் வாகன விபத்தினால் மரணித்துள்ளதாகவும் இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் குறித்த வாகன விபத்துக்களினால் அதிகளவிலான பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற பாதுகாப்பு கடவை, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியமை, வீதி ஒழுங்கு முறைமைகளை கடைப்பிடிக்காமை போன்றன காரணமாகவே அதிக வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

அதேநேரம், இவ்வருடம் இடம் பெற்ற விபத்துக்களில் ரயில் விபத்துக்கள் கணிசமான அளவு அதிகரிப்பை காட்டுகின்றன. இதற்கான சிறந்த உதாரணமாக கடந்த சி ல மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்ற யுவதிகள் இருவர்  பாடல்களை கேட்டுச் சென்றுள்ள நிலையில் ரயிலில் மோதுண்டு தூக்கி எறியப்பட்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது மாத்தறை பகுதியில் இளைஞர் ஒருவர் அதிவேக ரயில் ஒன்று எதிர்திசையில் பயணித்துக்கொண்டிருந்த வேளை ரயிலின் முன்பாகச் சென்று தண்டவாளத்தில் தனது கழுத்தை வைத்து தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவ்வாறான ரயில் விபத்துக்கள் இவ்வருடத்தில் கணிசமான அளவு இடம்பெற்றதில்   அதிகளவான இளம் உயிர்கள் காவுகொள் ளப்பட்டன. இவற்றை வெறுமனே வீதி விபத்துக்கள் என்று மட்டு வரையறுத்து விட முடியாது.  காரணம் இங்கு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட சம்பவங்கள் பலவும் பதிவாகியுள்ளன. குறிப்பாக இளைஞர்கள் தற்கொலை அதிகரித்துள்ளது.

மறுபுறத்தில் வாகன சாரதிகளின் கவனயீன போக்கு மற்றும் வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாலும் நாளாந்தம் ஒருவர், இருவர் என்றவாறு வீதி விபத்துக்களில் உயிரிழந்தோரின் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது.

அண்மையில் கெகிராவ பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த டிரக்டர் வாகனம் ஒன்றை மற்றுமொருவர் உயிர்பித்து செலுத்திச் சென்ற போது அவ்வழியே வந்த ஒருவர் மீது குறித்த டிரக்டர்  மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.   அப்பகுதியிலேயே  டிரக்டர் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பின்பு கற்பிட்டி  பகுதியில் வேகமாக பயணித்த வாகனம் ஒன்று ஒருவர் மீது மோதிவிட்டுச் சென்றதில் மொஹமட் லாபீர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து மொனறாகலை  பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளதில் முச்சகர வண்டியொன்றின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து கண்டி தெஹியத்தகண்டிய வீதியில் பயணிகளை ஏற்றிவந்த  தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று தலைகீழாக புரண்டதில் 11 பேர் கடுமையான காயங்களுக்கு இலக்காகி மேலும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். அதேபோல் காலி, மாத்தறை வீதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்தொன்றில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல இளம் நடிகை ஒருவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த போது  அவரது கார் வழுக்கிச் சென்று அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின்  மீது மோதியதில் குறித்த நடிகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்த சம்பவம் மீரிஹானை பகுதியில் இடம்பெற்றது.

கடந்த வருடத்தில் பதிவான விபத்துக்களை தொகுத்து போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் 2590 அபாயகரமான உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.   13095 சிறிய விபத்துக்கள் பதிவாகியுள்ளன.   13514 விபத்துக்களில் வாகனச் சேதங்களும் இடம்பெற்றுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் 10147 விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள்  மூலமாகவும் 4429 விபத்துக்கள் லொறியின் மூலமும் 4858 வித்துக்கள் இரட்டைச் சக்கர வாகனங்கள் மூலமாகவும் 2877 விபத்துக்கள் தனியார் பஸ்களின் மூலமாகவும் 6871 விபத்துக்கள் முச்சக்கர வண்டிகள் மூலமாகவும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் கடந்த வருடத்தில் 142 பேர் மட்டுமே இழப்பீடுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் 72 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ள போதிலும் ஏனைய 70 பேரினதும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது விபத்தில் இறந்தவர்களுக்கு 4 மில்லியன் ரூபாவும் காயங்களின் போதான மருத்துவ செலவுகளுக்காக 8.4 மில்லியன் ரூபாயும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாளாந்தம் பதிவாகும் விபத்துக்களின் அளவும் அவற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் குறைந்தவண்ணம் இல்லை. இவ்வாறான நிலையில் இது தொடர்பாக  மக்கள் அவதானமாக செயற்படுகின்றனரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறு அதிகரித்துச் செல்லும் விபத்துக்களை கட்டுப்படுத்த சட்டங்கள் பல நடைமுறைக்கு வந்தபோதும் அவற்றுக்கு எந்த அளவு மதிப்பளிக்கப்படுகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எவ்வாறாயினும் இவ்வாறான சட்டங்களும் எமது உயிர்பாதுகாப்பினை கருத்திற் கொண்டுதான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து செயற்படுதல் சிறதந்ததாகும்.

அதேநேரம், அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு  செலவு திட்டத்திலும் வீதி விதிகளை மதிக்காவண்ணம் செயற்படுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தின் தொகையில் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டங்கள் குறித்து பலவாறான விமர்சனங்கள் எழுந்த போதும் அவை பாதுகாப்புக்கு ஏதுவான காரணிகளாக அமையுமாயின் வரவேற்கத்தக்கதாகும்.

மேலும் வழமைக்கு மாறாக இவ்வருடத்தின் முதற்பகுதியில் சிறுவர்களினால் நிகழ்த்தப்பட்ட இரு விபத்துக்கள் பதிவாகியிருந்தன. எனவே இவ்வாறான விடயங்களிலும்   பொறுப்புடன் செயற்பட வேண்டியது காலத்துக்கு ஏற்ற  விடயமாக அமையும்.

எப்படியோ குவியும் பணம்..! தறிகெட்ட வாழ்க்கை..! குடி கும்மாளம்..! பயங்கர நோய்..! பரிதாப உண்மை..!?

சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும்  பரிதாபம் ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. கடைசியாக சபர்ணா என்கிற அழகான நடிகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்..!

நிர்வாணமாக..! வீடெங்கும் மதுப் பாட்டில்கள்..மாத்திரை மருந்துகள்..போதைப் பவுடர்கள்..! அப்பா, அம்மா இருந்தும் கூட தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார் சபர்ணா..!

அவர்பற்றி சின்னத்திரை வட்டாரங்கள் கூறும் போது, சபர்ணா பயங்கர மாடர்ன் கேர்ள். புதிதாக வாழவேண்டும். யார் தயவும் இல்லாமல் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்..!

ஆடம்பரப் பிரியை…! மார்கெட்டில் எது புதிதாக வந்தாலும் முதல் ஆளாக வாங்கி விடுவார்..! ஆண் நண்பர்கள் மிக அதிகம்..!

யாராவது டின்னருக்கு அழைத்துப்போய் விடுவார்கள்..! அவரது வீட்டிற்கும் ஆனா நண்பர்கள் கூட்டம் அலை மோதும்..! அப்படிப் பட்டவர் சமீப காலமாக மிகவும் சோர்ந்து இருந்தார்..!

உடல்நலம் சரி இல்லை என்றார்.. படபிடிப்புகளிலும் அதிகம் காணவில்லை.. என்கிறார்கள்..!

முன்பு இதே போல ஒரு   சின்னத்திரை நடிகை  கேன்சர் என்று டாக்டர்கள் கூறி விட, மனம் உடைந்து தூக்கில் தொங்கி இறந்து போனார்..!

அதே போல சபர்ணா ஏதாவது பாதிப்பு உள்ளாகி இருக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்..!!

சபர்ணா இறந்த அன்று இரண்டு மூன்று பேர் மது குடித்திருகிரார்கள் என்று கருதுகிறது காவல் துறை…!

அளவுக்கு அதிகமான பணம்..ஆண் நண்பர்கள்..எப்போதும் குடி கூத்து.. ‘அந்த’ விஷயங்களில் குவியும் லட்சங்கள்..தறிகெட்ட வாழ்க்கை..!

கட்டுப்பாடுகளும் கிடையாது..! அதனால் குறுகிய காலத்தில் எல்லாம் அனுபவித்து விட்டு மனம் உடைந்து செத்துப் போகிறார்கள்.

பரிதாபம் தான்..!!

விலைமாதுகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொதுஇடத்தில்..! அந்த கொடுமையை நீங்களே பாருங்க..!

அமெரிக்கா தேர்தலில் குறைவான ஓட்டுகள் பெற்றாலும் செனட் உறுப்பினர்கள் ஆதரவில் தொழில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

டிரம்பை அதிபராக்க கூடாது என அமெரிக்காவில்  பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது.

இவர் வெட்ட வெளியில் அழகிகளுடன் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை..

ஹெர்பீஸ் வைரஸ் நோயின் அறிகுறிகள் இவைகள் தான்!

உண்மையில் இதற்கும் பல்லி எச்சத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது ஒரு தொற்றுநோய்.Herpes simplex virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

ஹெர்பீஸ் வைரஸில் பல உப பிரிவுகள் உண்டு. கொப்பளிப்பான், நரம்புக் கொப்பளிப்பான், பாலியல் ஹெர்பீஸ் போன்றவை வேறு உதாரணங்களாகும்.

பொதுவாக இது நேரிடையாகத் தொற்றும்.
ஒரு முறை தொற்றினாலும் கிருமி நரம்புகளில் மறைந்திருந்து மீண்டும் மீண்டும் நோயை ஏற்படுத்த வல்லது.

இது பொதுவாக உதடுகளிலேயே ஏற்படுகிறது.

அதுவும் ஓரமாக, நடு உதட்டில் அல்ல. சிறு சிறு கொப்பளங்களின் கூட்டமாகத் தோன்றும்.

பல குழந்தைகளில் நாசித் தூரங்களிலும், வாயிற்கு உள்ளும் தோன்றும் .

அரிதாகக் கன்னங்களிலும் தோன்றுவதாகச் சொல்லப்படுகிறது.

முதன் முறை வரும்போது

முதல் முதலில் முக்கிமாகக் குழந்தைகளில் வரும்போது வேதனை இருக்கும்.

உதடுகளில் மட்டுமின்றி நாக்கிலும் வரலாம்.

கொப்பளங்கள் உடைந்து சிறிய புண்போலத் தோற்றமளிக்கும்.

பின் உலரத் தொடங்கும்போது மஞ்சள் ஆடைபோலப் பிடித்து, காய்ந்து மறையும். 3 முதல் 14 நாட்கள் வரை எடுக்கலாம். புண்கள் வாயிலிருக்கும்போது எச்சில் ஊறுவது அதிகமாகவும், வாய் மணமும் இருக்கும்.

கடுமையாக இருந்தால் மாத்திரம் குளிர், மெல்லிய காய்சல், காது வலி போன்றவை சேர்ந்து வரலாம்.

கட்டிளம் பருவத்தினரில் முதன் முதலில் வரும்போது வாய்ப் புண்களுக்கு பதிலாக தொண்டை வலியாக தோற்றலாம்.

மீண்டும் வரும்போது

திரும்ப வரும்போது முதல் முறை வந்ததுபோல கடுமையாகவோ வேதனை அளிப்பதாகவோ இருப்பதில்லை. வருடத்தில் ஓரிரு முறை வரலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வருவதுண்டு. ஆயினும் முதல் வருடம் கழிந்த பின்னர் நீண்ட இடைவெளிகளிலேயே வரும்.

ஆனால் பெரும்பாலும் தடிமன் காய்ச்சல் வரும்போதுதான் அவ்வாறான கொப்பளங்கள் போடுவதுண்டு. இதனால் ஆங்கிலத்தில் இவற்றை cold sores என அழைப்பார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல இவை கடுமையாக இருப்பதில்லை. வந்தாலும் குறுகிய காலத்திற்குள் சுமார 5-6 நாட்களுக்குள் குணமாகிவிடும். பெரும்பாலும் முன்பு வந்த அதே இடத்தில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ள டொனால்ட் ட்ரம்ப்!

கடந்த வாரம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்காக வாக்களித்தவர்களில் அதிகளவானோர் வெள்ளை இனத்தை சேர்த்த முதியவர்கள் என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்பிற்கு எதிராக தற்போதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் சில நகரங்களில் வன்முறையாக வெடித்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியதன் மூலம் அமெரிக்க தேசியவாதம் தலைதூக்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அமைச்சரின் கருத்து குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தேசியவாதத்தின் வெளிப்பாடாக பார்க்கவில்லை என அரசியல் கட்டுரையாளரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான பிலிப் ஷாந்த தெரிவித்துள்ளார்.

எனினும் அரசியல் மோதலுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க குடிமக்கள் ட்ரம்ப் தெரிவாகியுள்ளதன் ஊடாக தங்களுக்கு விரைவாக பதில் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ட்ரம்பின் வெற்றி ஒரு போதும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வர்த்தகத்தின் முடிவாக காணப்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டின் பொதுவான விடயங்களுக்கமைய அரசியல் முனைவாக்கமடைந்து தலைவர்கள் உயர்வடைந்துள்ளனர். இதனை தேசியவாதமாக நாங்கள் பார்க்க முடியாது. இவ்வாறான தெரிவு தற்போதைய பிரச்சனைகளுக்கு பதிலாக அமையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்பாராதவிதமாக தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் நாட்டில் உள்ள சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு ட்ரம்பினால் பதில் தேடுவெதென்பது சவாலான ஒரு விடயமாகும்.

வெற்றியின் பின்னர் தனி தேசியத்தில் கிடைக்கின்ற மக்கள் ஆதரவில் பதில் தேடுவதே ட்ரம்ப்புக்கு உள்ள சவாலாகும் என பிலிப் ஷாந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் மனைவியும் இரு பிள்ளைகளும் வெட்டிக்கொலை!!: நிர்வாணமாக நின்றார் கணவன்! காரணம்??

குடும்பத்தலைவன் ஒருவன் வாளொன்றினால் தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் வெட்டிச் சரித்த சம்பவத்தினால் கிளிக்குஞ்சுமலைக் கிராமமே சோபை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது.

திருகோணமலை கன்னியா உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காவது ஒழுங்ககையில் உள்ள வீடொன்றிலேயே இந்தக் கோரச் சம்பவம்இ நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் சந்தேகநபரான அக்குடும்பத்தின் தலைவனான ராஜலக்ஷ்மனன் (வயது 35) என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்தச் சந்தேகநபருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை என்று அறியமுடிகின்றது. இந்தச் சம்பவத்தில் தனது மனைவியான ராஜலக்ஷ்மனன் நித்தியா (வயது 32) இவரது மகள்களான காயத்திரி (வயது 10) சந்தியா (வயது 08) ஆகியோரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

வீட்டுக்குள் வைத்து மூவரையும் வெட்டிச் சாய்த்தமையால் அந்த வீடே இரத்தவெள்ளக் காடாக காட்சியளித்தது தரைகள் இரத்தத்தினால் தோய்ந்திருந்த நிலையில் சுவர்களில் இரத்தக் கறைகள் படிந்திருந்தன. அவ்வீட்டின் ஒரே அறையிலேயே அந்த மூவரும் கிடந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து அந்த வீட்டை குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்திய பொலிஸார் அவ்வீட்டுக்குள் யாரும் நுழைவதற்கு இடமளிக்கவில்லை.

எனினும்இ வீட்டு யன்னல்கள் மற்றும் கதவிகளின் ஊடாகப் பார்க்கும் போது அங்கு பெரும் கோரச் சம்பமொன்று இடம்பெற்றுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. வழமையாகவே கலகலப்பாக இருக்கின்ற அந்தக் கிராமம் இந்தச் சம்பவத்தினால் சோபையிழந்து சோகமயமாகக் காட்சியளிக்கின்றது.

சம்பவ தினமான நேற்றுக் காலையில் மனைவியையும் தன்னுடைய பிள்ளைகளையும் மனைவியின் அக்காவின் வீட்டுக்கு வழமையாகவே அழைத்துச் செல்லும் சந்தேக நபர் அவ்வாறே அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் வந்ததும் மனைவியின் அக்கா கின்னியாவுக்குக் கடைக்குச் சென்றுள்ளார். அவ்வீட்டிலிருந்த அம்மம்மா உறவு முறையான வயோதிபப் பெண்ணும் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

இந்நிலையிலேயேஇ காலை 11 மணியளவில் அவ்வீட்டிலிருந்து அபயக் குரல் கேட்டுள்ளது. இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அக்குரல் அமையடைந்தது. சத்தம் வந்த திசையில் உள்ள வீட்டில் ஏதாவது விபரீதம் இடம்பெற்றிருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் அவ்வீட்டை நோக்கி படையெடுத்தனர். அபயக்குரல் காற்றோடு காற்றாக கலக்க அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களே அவ்வீட்டைநோக்கி விரைந்துவிட்டனர்.

எனினும் வீட்டுக்குள் யாரும் போகவில்லை. வீட்டிலிருந்த கதவுகள் மற்றும் யன்னல்கள் யாவும் மூடியிருந்தமையால் அயலவர்களின் உதவியுடன் அக்காவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் அறிவிக்கப்பட்டது. உப்புவெளிப் பொலிஸார்இ ஸ்தலத்துக்கு உடனடியாக விரைந்துவந்தனர்.

அவ்வீட்டில் ஏதோவொரு விபரீதம் இடம்பெற்றுள்ளதை உணர்ந்துகொண்ட பொலிஸார் தங்களுடன் இரண்டொருவரை கூரையின் மீதேற்றிஇ கூரைத்தகட்டைக் கழற்றிப் பார்த்துள்ளனர். அதுவரையிலும் சந்தேகநபரான ராஜலஷ்மனன் வாளை ஏந்தியவாறுஇ நிர்வாணக்கோலத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்னும் சில கூரைத்தகடுகளைக் கழற்ற முற்படுகையில் அவற்றிலிருந்த சிறிய துண்டொன்றுஇ சந்தேகநபரின் உடலில் விழுந்துவிடவேஇ சந்தேகநபர் வாளுடன் சரிந்துவிட்டதாகவும் அதன்பின்னரே கதவுகளை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து சந்தேகநபரைக் கைதுசெய்ததுடன் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியிருந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுமதிக்க எடுத்துச்சென்றுள்ளனர். எனினும் அந்த மூவரும் மரணமடைந்துவிட்டனர். மயக்கமடைந்த நிலையில் இருந்த சந்தேகநபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். குறித்த சந்தேகநபர் பயபக்தி உடையவர் என்றும் தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள கோயிலில் அவ்வப்போது பூஜைவழிபாடுகளில் ஈடுபடுபவர் என்றும் தெரிவிக்கும் அயலவர்கள் கணவனும்-மனைவியும் புரிந்துணர்வுடன் வாழ்பவர்கள் என்றும்இ தங்களுடைய பிள்ளைகள் இருவரையும் அன்பாகவும் பாசத்துடன் கவனிப்பவர்கள் என்றும் அறியமுடிகின்றது.

சம்பவ தினமான நேற்றுஇ தனது இரு பிள்ளைகளையும் தனது வீட்டில் வைத்துஇ மஞ்சள் நீரினால் நீராடச் செய்த பின்னரே தனது மனைவியின் அக்கா வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பில்

பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இன்று (நேற்று) காலை 11 மணியளவில் தாயும் அவருடைய பெண் பிள்ளைகள் இருவரும் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இரத்தத்தினால் தோய்ந்திருந்த நிலையில்இ அந்த வீட்டுக்குள்ளிருந்த மூவரும்இ கிராமவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

எனினும் அந்த மூவரும் மரணமடைந்திருந்தனர். இந்நிலையில் இந்த முக்கொலையின் சூத்திரதாரி சம்பவத்தில் மரணமடைந்துள்ள அந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையெனக் கூறப்பட்டது. இதனையடுத்து கன்னியா கிளிக்குஞ்சுமலையைச் சேர்ந்த 34 வயதான ராஜலஷ்மனன் என்பவர் உப்புவெளிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் எதற்காக இடம்பெற்றது என்பது தொடர்பில் சந்தேகநபரின் மயக்கம் தெளிந்ததன் பின்னரே அறியமுடியும் என்று தெரிவித்த உப்புவெளிப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.familly maiviiiaada

சிறுநீரில் இரத்தம் இருக்குமாயின் அது புற்றுநோய்கான அறிகுறியாம்!

சிறுநீரில் இரத்தம் இருக்குமாயின் அது புற்றுநோய்க்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தடவையேனும் சிறுநீரில் இரத்தம் தென்படுமாயின் அது சிறுநீரகப் புற்றுநோய்கான ஒரு அறிகுறி என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களில் சிறுநீரகப் புற்றுநோய் மூன்றில் ஒரு வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2011 ஆண்டு புற்றுநோயினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் ஏழு வீதத்தால் அதிகரித்து 3 ஆயிரத்து 500 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைத்தல் மற்றும் உடற்பருமன் போன்ற காரணங்கள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளே சிறுநீரக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிப்பதாக இங்கிலாந்தின் உடற்சுகாதாரப் பிரிவினர் கூறியுள்ளனர்.

சிறுநீரகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியும் பட்சத்தில், உயிரிழப்பு வீதத்தை குறைக்கலாம் எனவும் சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எச்சரிக்கை: நுளம்புச் சுருளொன்று 75-137 சிகரெட்டுகளுக்கு சமமானது!

நுளம்புச் சுருளொன்றின் மூலம் வெளிவரும் புகையின் அளவானது 75-137 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானதென அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் வீதி வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் வெளிப்புற காற்று மாசடைவை விட வீடுகள் மற்றும் வாகனங்களின் உட்புறத்தில் அதிக காற்று மாசடைவதாக (indoor air pollution) புதிய ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விறகடுப்பு, நுளம்புச் சுருள், வாசணை திரவியங்கள், சாம்பராணி, கற்பூரம் முதலியவை வீட்டில் உபயோகிப்பதனாலேயே காற்று அதிகமாக மாசடைவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த புகையின் காரணமாக ஒரு வருடத்தில் 43 இலட்ச உலக மக்கள் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் இதில் சிறு குழந்தைகளும் பெண்களுமே அதிகம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

20% மக்கள் செய்த தவறுக்கு 80% மக்களுக்கு தண்டனையா? விஜய் ஆவேச கேள்வி

பிரதமர் நரேந்திரமோடி  கடந்த வாரம் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தவுடன் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றியது. இதனால் ஏழை, எளிய மக்கள் பலவழிகளில் பாதிக்கபட்டனர். எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுத்து வந்தாலும் பெரும்பாலானோர் இந்த நடவடிக்கையை ஆதரித்தும் வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் படும் இன்னல்களுக்கு மாற்று வழி தேடவும் அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இளையதளபதி விஜய் சற்றுமுன்  தனது கருத்தை செய்தியாளர்கள் மூலம் பகிர்ந்து கொண்டார். விஜய் கூறியது இதுதான்:

பிரதமர் எடுத்துள்ள இந்த முடிவு உண்மையில் மிக மிக துணிச்சலான முடிவு என்பதை முதலில் தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டிற்கு தேவையான, வரவேற்கத்தக்க முடிவு என்பது மட்டுமின்றி நம் நாட்டின் பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை நிச்சயம் வளர்க்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரிதாக இருக்கும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு சின்ன சின்னதாக இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த பாதிப்புகள் அந்த நோக்கத்தை விட பெரியதாகி விடாமல் நாம் எல்லோரும் பார்த்து கொள்ள வேண்டும்

பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளான சாப்பாடு, மருந்து பொருட்கள் வாங்குதல், வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பாமல் இருப்பதி, தியேட்டர்கள், மால்கள் வியாபாரிகள் ஆகியோர்கள் வியாபாரம் இன்றி பாதிக்கப்படுவதை தவிர்த்திருக்கலாம்

ஒருசில செய்திகள் படித்தவுடன் எனது மனதை பாதித்தது. பேத்தியின் திருமணத்திற்கு நிலத்தை விற்ற ஒரு முதிய பெண், தன்னிடம் உள்ள ரூபாய்கள் செல்லாது என்பதை அறிந்து தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற குழந்தை ஒன்று ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறிய காரணத்தால் சிகிச்சை மறுக்கப்பட்டு மரணம் அடைந்த போன சம்பவம் ஆகியவற்றை  தவிர்த்திருக்கலாம்

நம் நாட்டில் 20% பணக்காரர்கள் இருப்பார்களா? அவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் செய்த தவறுக்காக மீதியுள்ள 80% மக்கள் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

நான் திரும்ப திரும்ப கூறும் ஒரு விஷயம் என்னவென்றால் இதுவரை யாரும் செய்யாத, யோசிக்க கூட இல்லாத ஒரு விஷயத்தை இந்த அரசு செய்தது உண்மையிலேயே சாதனைதான். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற முக்கியமான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே ஆலோசித்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து

இன்றுமுதல் ஓரளவுக்கு நிலைமை சீரடைந்ததாக கேள்விப்பட்டேன். ஆனாலும் இன்னும் கிராம உள்ள மற்றும் சீனியர் சிட்டிசன் ஆகியோர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க இந்த அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

ரசிகர்களை கடுப்பேற்றிய அமலா பால்… கவர்ச்சி செல்பி ஸ்டில்

இயக்குனர் கணவர் விஜயை பிரிந்த அமலா பால், தான் மிக சந்தோசமாக இருப்பதை உலகிற்கு தெரிவிக்க வேண்டி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களையும், ஹாலிடே சென்று ரிலாக்ஸ் செய்யும் படங்களையும் சகட்டு மேனிக்கு பதிவிட்டு வருகிறார்.

அதில் சமீபத்தில், மலேசியாவில் இருந்து ஒரு கவர்ச்சி செல்பியை பதிவிட்டார். அதை கண்டு அவரின் ரசிகர்கள் கொதித்து விட்டனர்.ஒரு சிலர் சூப்பர் என்றாலும், ஒரு சில ரசிகர்கள்…” மீண்டும் நீங்கள் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால், நீங்கள் என்றால் ஒரு அழகான பிம்பம் ஒன்றை எங்களுக்குள் வைத்துள்ளோம்.கவர்ச்சி படங்களை வெளியிட்டு அதை கெடுக்காதீர்கள்.” என்று கருத்து கூறி உள்ளனர்.

விவசாயிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யும் மோடி!

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளில் காத்துக்கிடக்கின்றனர்.

முக்கிய தேவைக்காக சேமித்து வைத்த பணத்தை செலவு செய்ய முடியாத நிலையில், அதை வங்கிகளில் டெபாசிட் செய்தால் ஏதாவது பிரச்சனையை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் பலர் உள்ளனர்.

தற்போது பணம் மாற்றவும், எடுக்கவும் உள்ள கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டபோதிலும், கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

‘காரிப் பருவ அறுவடை முடிந்து தங்களிடம் இருப்பு உள்ள பணத்தை ரபி பருவ விதைப்புக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் வாங்க பயன்படுத்தலாம் என நம்பியிருந்தனர்.

மத்திய அரசின் திடீர் அறிவிப்பினால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

திருமண சீசன் என்பதால் பல விவசாயிகள் பணத்தை பயன்படுத்த முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பா.ஜ.க. அரசு உண்மையிலேயே விவசாயிகளின் நலனின் அக்கறை கொண்ட அரசாக இருந்தால், அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உதவ வேண்டும்’ என்று அகிலேஷ் கூறியுள்ளார்.

ஒன்பதாவது நாளாகவும் தொடரும் சுகாதார ஊழியர்களின் போராட்டம்

யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பலநல உத்தியோகத்தர்கள் யாழ்.மாநகரசபை நுழைவாயிலை மறித்து நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது, இன்று(15) ஒன்பதாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்மை நேரில் சந்தித்து பேசவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த இடத்திற்கு யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் வருகைதந்து நிர்வாக முடக்கல் போராட்டத்தை நிறுத்தும் படி கோரியதுடன் அமைதியான போராட்டத்திற்கு தாமும் ஆதரவு வழங்குவதாக கூயுள்ளனர்.

இருப்பினும் தொழிலாளர்கள் பொலிஸாரின் வேண்டுகோளை புறந்தள்ளி தொடர்ந்தும் நிர்வாக முடக்கல் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

மேலும், யாழ்.மாநகர சபையில் பணியாற்றிவரும் குறித்த, 127 சுகாதார ஊழியர்களும் கடந்த ஏழாம் திகதி தொடக்கம் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.nerse22

சிங்களவர் தமிழையும், தமிழர் சிங்களமும் கற்க வேண்டியது அவசியம்!

தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும் சிங்கள மாணவர்களுக்கு தமிழையும் கற்பிப்பதை கட்டாயமாக்கும் சட்டமூலத்தை மாகாண சபையில் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையுடன் பேசி இது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லூர் ஹிந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர்  இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

பாதங்களில் உள்ள வெடிப்பை போக்க எளிய வழிகள்

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.

குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும்.

இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

இதுவரை எயிட்ஸ் நோயினினால் அதிக மரணம் கொழும்பில்!

இவ் வருடத்தில் இதுவரையில்  எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்  பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.

எயிட்சினால் பாதிக்கப்பட்டுள்ளதை  அறியாமல் இருந்ததே  மரணங்கள் அதிகரிக்க காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, தற்போது வரை நாட்டில் எயிட்ஸ் நோய் காரணமாக 405 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 50 வீதத்திற்கும் மேற்பட்டவை கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதோடு இவ்வருடத்தில் இதுவரை 215 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்

ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கையை முழுமைப்படுத்துகிறது. இவர்கள் ஓர் ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறார்கள், இவர்களது பங்கு ஆணின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்..

* தாயாக ஓர் ஆணின் வாழ்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறாள். இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி, இவள் மூலமாக தான் உறவுகளும் நமக்கு அறிமுகம் ஆகிறது.

* ஓர் ஆண் முதன் முதலாக காவலனாக இருப்பது அவனது சகோதரிக்கு தான். ஒவ்வொரு மகளின் முதல் ஹீரோ அப்பா என்றால், முதல் காவலன் அவளது சகோதரனாக தான் இருக்க முடியும்.

* உறவினர், தாய், சகோதரிக்கு பிறகு ஓர் ஆணுக்கு கிடைக்கும் முதல் வெளியுலக பெண் உறவு, தோழி தான். ஓர் உண்மையான தோழியுடன் ஆண் தன் வாழ்க்கையின் அனைத்து சுக, துக்கங்களையும் பகிர்ந்துக் கொள்கிறான். ஏனெனில், அந்த ஒரு தோழியினால் தான் அவனது துக்கத்தை குறைக்கவும், சுகத்தை பெருக்கவும் முடியும்.

* சிலருக்கு காதலி மனைவியாக அமைகிறார்கள், சிலருக்கு மனைவி தான் காதலியாக அமைகிறார்கள். ஏதோ ஓர் வகையில் அனைவருக்கும் ஓர் காதலில் கிடைத்து விடுகிறாள். ஒவ்வொரு ஆண்மகனின் பருவ வயது ஏக்கம் காதல். ஆனால் அது பதின் வயதை தாண்டியும் நிலைத்து நின்றால் மட்டுமே புனிதம் ஆகிறது. காதல் என்பது ஓர் ஆணின் வாழ்க்கையை சொர்க்கமாக்குகிறது.

* தன் பதியை நம்பி உடல், பொருள், ஆவியில் பாதி அங்கம் கொடுப்பவள் மனைவி. மனைவி தவறு செய்யும் கணவன் கண்டிப்பான், அதே கணவன் தவறு செய்யும் போது மனைவி திருத்துவாள். இதுதான் கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் வித்தியாசம். உண்மையிலேயே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான்.

* ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், பெண்ணுடனான உறவு என்பது, ஓர் பெண்ணின் கருவறையில் தொடங்கி, மற்றொரு பெண்ணின் கருவறையில் முடிவடைகிறது. தாயின் கருவறையில் இருந்து இவ்வுலகில் தொடங்கி, மனைவியின் கருவில் இருந்து உதித்த மகள் எனும் புதிய உலகம் என ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் இரண்டு உலகங்கள் இருக்கின்றன.

* முதுமை எட்டிய பிறகு ஓர் ஆண் அதிகம் மனம் மகிழ்ந்து புன்னகைக்கிறான் எனில் அதற்கு முக்கிய காரணம் அவனது உயிரில் இருந்து ஜனித்த உயிரின் உயிராக தான் இருக்க முடியும். தாத்தா ஆரம்பித்து பேத்தி கேட்கும் விடைகளுக்கு ஏதேனும் ஓர் பதிலை அவன் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறான்.

ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டு பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்டு

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை அமெரிக்காவில் உள்ள ஒரு பிரிவினர் ஏற்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பெண்கள் அவமதிப்பு உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. அதுவே அவர் மீதான எதிர்ப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மவுன்பெய்ன் வியு உயர்நிலைப் பள்ளியில் பிராங்க் நவாரோ என்ற வரலாற்று பாட ஆசிரியர் பாடம் நடத்தினார்.

அப்போது ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டார். ஜெர்மனியை மீண்டும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்வேன் என ஹிட்லர் தெரிவித்தார். அதே போன்று, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பும் அமெரிக்காவை மீண்டும் பெரிய அளவில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என உறுதி அளித்துள்ளார் என்று மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

இது குறித்து அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் கூறினர். ஹிட்லருடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை ஒப்பிடுவதா? என கண்டித்தனர்.

இதை தொடர்ந்து வரலாற்று பாட ஆசிரியர் பிராங்க் நவாரோவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு (தற்காலிக பணிநீக்கம்) செய்தது.

சனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020 வரை உங்களுக்கு எப்படி ? அடுத்தவருவதை அறிய ஆர்வமா!

வருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்அ தீமைகளை வெளிக்காட்டியுள்ளது….

எந்த எந்த ராசிகளுக்கு சனி பெயர்ச்சி சாதகம் யாருக்கு பாதகம்…

எத்தனை ஆண்டுகள் எப்படி பயணிக்கப் போகிறது…astro

யாழ் தேவியை காப்பாற்றிய கண் பார்வையற்ற நபர்! பேராபத்திலிருந்து தப்பிய ஆயிரக்கணக்கான மக்கள்

காங்கேசன்துறையில் இருந்து காலிக்கு பாரிய அளவிலான பயணிகளுடன் பயணித்த யாழ்தேவி ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை நபர் ஒருவர் தடுத்துள்ளார்.

வடக்கு ரயில் வீதியின் 108 3/4 கிலோ மீற்றர் மைல் கல் அருகில் ரயில் பாதை இராண்டாக உடைந்திருந்த நிலையில் ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனை அவதானித்த நபர் ஒருவர் சிவப்பு நிறத்திலான துணியை ரயிலை நோக்கி அசைத்து ஆபத்தினை தெரியப்படுத்தினார். இதனை உணர்ந்து கொண்ட ரயில் சாரதியை ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.

தம்புக்த்தேகமவில் வசிக்கும் அங்கவீனமுற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பாரிய அனர்த்தத்தை தடுத்துள்ளார்.

வெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தொன்றில் கண்களை இழந்த 44 வயதான W.விஜித என்ற நபர் திறமையாக செயற்பட்டமையால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற முடிந்துள்ளது.

நேற்று மாலை 3.25 அளவில் பௌணர்மி என்பதனால் விகாரைக்கு செல்வதற்காக வடக்கு ரயில் பாதை ஊடாக பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், வடக்கு ரயில் பாதையின் 10 இலக்கம் பெதிவெவ கிராமத்திற்கு அருகில் (தபுத்தேகம மற்றும் சேனரத்கம ரயில் பாதைக்கு இடையில்) ரயில் பாதை கிட்டத்தட்ட 3 அடி அளவில் உடைந்து பிரிந்து சென்றிருந்தனை கண்ட மக்கள் இது தொடர்பில் பொலிஸ் அவசர இலக்கத்தில் உடனடியாக அறிவித்துள்ளனர்.

அந்த அறிவிப்பு மேற்கொண்டு சில நிமிடங்கள் செல்வதற்கு முன்னர் பயணிகளை ஏற்றிக் கொண்டு தபுத்தேகமயில் இருந்து செனர்த்கம நோக்கி வேகமாக பயணித்த ரயில் ஒன்றின் சத்தத்தை கேட்ட விஜத, உடனடியாக தனது வீட்டிற்கு சென்று சிவப்பு நிறத்திலான ஆடை ஒன்றை எடுத்து வந்து ரயில் வீதியில் விபத்தொன்று ஏற்படும் என்பதனால் ரயில் உடனடியாக நிறுத்துமாறு ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை அசைவுகளை மேற்கொண்டுள்ளார்.

ஆபத்தென்பதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.. ரயிலை நிறுத்திய சாரதி உட்பட அதிகாரிகள் ரயில் பாதையை அவதானித்த போது ரயில் பாதையின் ஒரு பகுதி உடைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த நபர் சரியான நேரத்தில் இந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் பாரிய விபத்தொன்று ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் கிட்டத்தட்ட 2500 மேற்பட்ட பயணிகள் யாழ்தேவியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரூபாய் நோட்டுகளினால் விவசாயி தற்கொலை!

தமிழகத்தில் உள்ள பஞ்சாலை ஒன்றில் தொழிலாளிகளாக வேலை பார்ப்பவர்கள் சுனில் (வயது 22), அனில் (20). அண்ணன், தம்பிகளான இருவரும் சத்தீஸ்கார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 8-ந் திகதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், சுனில் மற்றும் அனிலுக்கு ஊதியம் கொடுக்காமல் ஒப்பந்தகாரர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இதனால் சகோதரர்கள், சொந்த ஊர் திரும்ப கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டனர்.

இதனையடுத்து சத்தீஸ்கார் மாநிலம் மகாராஜ்புரில் உள்ள தங்கள் தந்தை ரவி பிரதானுக்கு (45) போன் செய்து, தங்களுக்கு பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ரவி பிரதான் விவசாயம் பார்த்து வந்தார்.

இதனையடுத்து வீட்டில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அருகில் உள்ள வங்கிக்கு ரவி பிரதான் சென்றார்.

அங்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து 2 நாட்களாக காத்திருந்தும் அவரால் ரூபாய் நோட்டை மாற்ற முடியவில்லை.

சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் மகன்களுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றி பணம் அனுப்ப முடியாத விரக்தியில் விவசாயி ரவி பிரதான், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சத்தீஸ்கார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.