ஆச்சர்யம் ஆனால் உண்மை: டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆனது ஒரு நாட்டிற்கு மட்டும் தெரியாது

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள தகவல் ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா குடிமக்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை என வெளியாகியுள்ள தகவல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த உலக நாடுகள் அனைத்தும் பரபரப்பாக அமெரிக்க தேர்தலை உணிப்பாக கவனித்து வந்தது அனைவரும் அறிந்தது தான்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக அரசியல் பின்னணி இல்லாத டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது உலக நாடுகள் அனைத்திலும் முக்கிய செய்தியாக வெளியானது.

இதுமட்டுமில்லாமல், இன்றளவும் டொனால்ட் டிரம்பின் வெற்றியை தான் முக்கிய செய்தியாக உலக பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன.

ஆனால், ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா குடிமக்களுக்கு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது இதுவரை அந்நாட்டு அரசு தெரியப்படுத்தாமால் ரகசியமாக வைத்து வருகிறது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவில் உள்ள பி.பி.சி செய்தியாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பற்றி இங்குள்ள ஒருவருக்கும் எதுவும் தெரியாது.

கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டு 3 நாட்களுக்கு பிறகு தான் தனது குடிமக்களுக்கு வட கொரியா அரசு அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியது’ என அந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் வெறுப்பையும் அதிருப்தியையும் பெற்று வரும் வட கொரியா அரசு அங்கு ஒரு தனி உலகத்தையே நடத்தி வருகிறது.

வட கொரியா நாட்டில் தனியார் தொலைக்காட்சிகள் செயல்பட அனுமதி கிடையாது. இதனால், அரசு அதிகாரப்பூர்வமாக ஒளிப்பரப்பும் தகவல் மட்டுமே குடிமக்களுக்கு சென்றடையும்.

சில முக்கிய அதிகாரிகள் தவிர நாடு முழுவதும் இணையத்தளம் பயன்படுத்த குடிமக்களுக்கு தடை உள்ளதால் அவர்களால் இணையத்தளம் வழியாகவும் இச்செய்தியை அறிந்துக்கொள்ள முடியாது.

மேலும், வட கொரியா நாட்டிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர்கள் கைப்பேசி வைத்துக்கொள்ள அனுமதி இல்லாததால் அவர்கள் மூலமும் குடிமக்கள் செய்தியை தெரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை.

இதுபோன்ற ஒரு சூழலில் இதுநாள் வரை வட கொரியா குடிமக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி யார் என்ற தகவல் தெரியப்படுத்தவில்லை என்பது பெரும் வேதனையான செய்தியாகும்.

மலம் கழிக்க ஆரோக்கியமான நேரம் எது?

இதர கடன் பிரச்சனைகளை விட, இந்த காலை கடன் பிரச்சனை தான் மனிதர்களை பாடாய்ப்படுத்தி விடும். எந்த சிரமும் இன்றி காலை கடனை கழிப்பவர்கள் தான் உண்மையில் புண்ணியம் செய்தவர்கள்.

இன்றைய ஸ்மார்ட் போன் டிஜிட்டல் யுகம், உணவு கலாச்சார மாற்றங்கள் போன்றவை மலம் கழித்தலில் பிரச்சனைகள், கோளாறுகளை உண்டாக்குகின்றன.

மலம் கழித்தலில் உண்டாகும் பிரச்சனைகள் உங்கள் ஆரோக்கியத்தை மெல்லே, மெல்ல கரையான் போல அரிக்க துவங்கும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

எது சிறந்த நேரம்?

நமது சிறுகுடல், முந்தய தினம், இரவு உண்ட உணவை செரிமானம் ஆனது போக கழிவை முதல் வேலையாக காலையில் தான் வெளியேற்ற தயாராகும். நீங்கள் கண் விழித்த முதல் 30 நிமிடங்களில் சிறுகுடல் கழிவுகளை வெளியேற்ற தயார் நிலையில் இருக்கும்.

சிரமமாக இருக்கிறதா?

காலை நீங்கள் கண்விழித்த உடன் முதல் வெளியாக செய்ய வேண்டியது மலம் கழிப்பது தான். ஒருவேளை மலம் கழிப்பதில் சிரமமாக உணர்ந்தால், ஒரு கப் காபி, இதமான சுடுதண்ணி, சுடுதண்ணியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

காலையில் மலம் கழிக்க முடியாவிட்டால்?

ஒருவேளை காலை வேளையில் மலம் கழிக்க முடியவில்லை, வரவில்லை, முயற்சித்தாலும் சிரமமாக இருக்கிறது எனில், கவலைப்பட வேண்டாம். தினமும் நீங்கள் சரியான நேரத்தில் மலம் கழிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

கோல்டன் ரூல்!

சிலருக்கு 8 மணிக்கு, சிலருக்கு காலை சிற்றுண்டி கழித்த அரைமணிநேரம் கழித்து, சிலருக்கு அலுவலகம் சென்ற பிறகு கூட மலம் கழிக்க வரலாம். தினமும் ஒரே நேரத்தில் நீங்கள் சீராக மலம் கழித்தல், உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இதை ஆங்கில மருத்துவ முறையில் கோல்டன் ரூல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

எத்தனை முறை இயல்பு?

ஒரு நாளைக்கு இரண்டில் இருந்து மூன்று முறை வரை மலம் கழித்தல் இயல்பு. இரண்டு நாளுக்கு ஒருமுறை அல்லது ஒரே நாளில் ஐந்து முறைக்கும் மேல் மலம் கழிக்க செல்லுதல் போன்றவை உங்கள் குடல் இயக்கம் மற்றும் செரிமானத்தில் ஏதோ மாற்றங்கள் உண்டாவதை உணர்த்துபவை.

எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

 

மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் ஜீரண முத்திரை

செய்முறை :

பத்மாசனம் போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது.

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும்.

பயன்கள் :

சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

இணையத்தில் பலகோடி மக்கள் பார்த்து ரசித்த வீடியோ!

கட்டுக்கட்டாக பழைய நோட்டுகளை வைத்திருந்த பிச்சைக்காரர்! மாற்ற முடியாமல் அவஸ்தை…

கடந்த 8ஆம் தேதி முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு வசதி படைத்தவர்கள் முதல் , கீழ்த்தட்டு மக்கள் வரை அனைவரையும் பாதித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் தேவாஸ் பகுதியை சேர்ந்த கண்பார்வை தெரியாத பிச்சைக்கார முதியவர் ஒருவர் கிராமத்து தலைவரிடம் தான் வாழ்நாள் முழுதும் சம்பாதித்த தொகையை மாற்றித்தருமாறு கட்டுக்கட்டாக பணத்தை கொடுத்துள்ளார். அதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் வரை இருந்துள்ளது.

அந்த பிச்சைக்கார முதியவர் தன்னுடைய மேலும் சில சேமிப்புகளை தனது நண்பர்களிடம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார். பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகவே, பயந்து போன இவரது நண்பர்கள் அந்த பணத்தை இவரிடமே திருப்பி கொடுத்துள்ளனர்.

இந்த பார்வையற்ற முதியவருக்கு வங்கியில் கணக்கு இல்லாததால், இந்த பிரச்சனைக்கு வங்கி அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண முடிவு செய்துள்ளனர்.

பிக்குவுக்கும், பொலிஸாருக்கும் சட்ட நடவடிக்கை எடுப்பேன் :முதலமைச்சர்

மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரிடம் தகாத வார்த்தைகளையும் இனத் துவேச ரீதியாகவும் திட்டிய சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருதில் நேற்று இரவு (14) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

குறித்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்காதவன் என்ற வகையில் தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்திற்கு சிறுபான்மை சமூகம் இரு கரம் நீட்டி தயாராகவுள்ள நிலையில் இவ்வாறு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் இனங்களிடையே மீண்டும் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கிழக்கில் சிறுபான்மையினரை திட்டமிட்ட வகையில் ஒழிப்பதற்கு இனவாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனரா? என்ற சந்தேகத்தை இவ்வாறான தொடர் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன.

பெரும்பான்மையின தேரர் ஒருவர் நீதித்துறையின் செயற்பாடுகளை விமர்சிப்பதும் அதை மதிக்காமல் அதற்கு எதிராக செயற்பட முனைவதும் இலங்கையின் நீதிக்கட்டமைப்பையே கேள்விக்குட்படுத்தும் விடயம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதித்துறை கட்டமைப்பில் தமக்கு எதிராக அநீதிகள் இடம்பெறும் போது அதற்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கின்றது என்பதுடன் இந்த தேரர் வழக்கு தொடர்ந்த அரச ஊழியர் ஒருவரை அச்சுறுத்துகின்றார் என்றால் அவர் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் என்றே கூற வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் என்பதில்லை தேரராக இருந்தாலும் ஐயராக இருந்தாலும் பாதிரியாராக இருந்தாலும் மௌலவியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஆகவே நீதித்துறையின் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இந்த தேரரின் நடவடிக்கையினை கண்டிப்பதுடன் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த தேரர் கைது செய்யப்பட வேண்டும்.

அது மாத்திரமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் சக அரச ஊழியர் ஒருவரை தூற்றப்படுவதை பார்த்துக் கொண்டு அருகில் இருந்து கைகட்டி வாய்மூடி மௌனமாக இருப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் குறித்த அதிகாரிகள் மீதும் எவ்வித தயவு தாட்சணையும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொலிஸாரே சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை பார்த்தும் பாராமுகமாக இருக்கின்றார்கள் என்றால் எமது எதிர்கால இருப்புக்கும் பாதுகாப்புக்கும் என்ன உத்தரவாதம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இறக்காமத்தில் அண்மையில் சிலை வைக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக செயற்படும் சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான நல்லாட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தயா கமகே பதவி விலக்கப்பட வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தியிருந்தேன்.

இவ்வாறான அரசியல்வாதிகளின் தவறான முன்னுதாரணங்களின் மூலமே இவ்வாறான நடவடிக்கைகள் பகிரங்கமாக அச்சமின்றி முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .

ஆகவே சிறுபான்மை மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கி அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறி சமூகங்களிடையே மீண்டும் மோதலை ஏற்படுத்த முற்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்,

இனவாதம் பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர்காய நினைப்பவர்களுக்கு எதிராக புதிய சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

அது மாத்திரமன்றி பௌத்த தேரர் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது பௌத்தர்கள் தொடர்பில் தவறான புரிதலை சர்வதேசத்தின் மத்தியில் ஏற்படுத்தும் என்பதையும் தௌிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கை, கால், முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்!

முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால்  நம்கண்களுக்கு அதிகம் தெரியாத பகுதி என்பதால், கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகளுக்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

நீர்ச்சத்துக் குறைவால் சருமம் வறண்டுபோவதால், இறந்த செல்கள் தேங்கி இப்பகுதிகள் கறுத்துவிடுகின்றன. மூட்டுத்தோல்பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும். மூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத் தை சீர்செய்ய முடியும். ரத்த ஓட்டம் சீரானால் கறுப்புத் திட்டுக்கள் மறையும். தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 – 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும்.

ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும். கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் அப்படியேவிட வேண்டும். பின்னர், தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். தேன் அதிக அளவு சேர்த்து, தினமும் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.

ஆஸியில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து கொலை

அவுஸ்திரேலியா – சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பிரபல பாதாள குழு தலைவர் ஒருவர் நடு வீதியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பஸ்குலோ பர்பரோ என்ற 35 வயது மதிக்கத்தக்க பாதாளகுழு தலைவனே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் நடு வீதியில் கொல்லப்பட்டு  இரத்த வெள்ளத்தில் கிடந்த பர்பரோவின் சடலத்தை அகற்றியுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த போது காரில் வந்த சிலர் பர்பரோவை கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைகள் பிற குழந்தைகளை அடிப்பது எதனால்?

கோபம் என்னும் உணர்ச்சி மனிதனின் மனதில் இயற்கையாகவே உண்டு. பிறப்பிலேயே நாம் பெறும் பல குணங்களில் கோபமும் ஒன்று. குழந்தகளுக்கு அது சற்று அதிகம். பக்குவப்பட்ட மனிதன் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு வெளிக்காட்டுவதில்லை. குழந்தைகளுக்கு எந்த உணர்ச்சியையும் அடக்கத் தெரியாது.

கோபத்தையும் எல்லா உணர்ச்சிகளையும் போலவே வெளிப்படுத்தி விடுகிறார்கள். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் திடீரென அடித்து சண்டை போட்டுக் கொள்வது இதனால் தான். உணர்ச்சித் தூண்டலுக்குக் காரணமான அமிக்டாலா என்னும் மூளைப் பகுதி பெண்களை விட ஆண்களுக்கு சற்று பெரிதாக இருப்பதால் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடம் இக்கோபம் சற்று அதிகமாகவே காணப்படும். குழந்தைகள் கோபப்பட்டு அடிக்கடி பிற குழந்தைகளை அடித்து விடுவதால் பிரச்சனைகளும் அதிகம்.

பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்கு கோபத்தை வெளிப்படுத்தும் விதங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அதைச் சரியாக கற்றுக் கொடுக்காத போது தான் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன.

ஒரு வீட்டில் செல்லப் பிள்ளையாக ஒரு குழந்தை ஒன்று வளரலாம். அவ்வீட்டில் வளரும் வேறு சில குழந்தைகளை இக்குழந்தை அடிக்கும் போது சம்மந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் உடனடியாக அவ்வாறு பிறரை அடிப்பது தவறு என்பதை தன் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஏன் சண்டை வந்தது, எதற்காக அடிதடி நடந்தது என்பதை பெற்றோர் நன்கு ஆய்வு செய்ய வேண்டும். பிரச்சனைகள் தோன்றும்போது அடிக்காமல் தன் நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகள் அடிப்பது, கடிப்பது, கிள்ளுவது போன்றவைகளெல்லாம் சாதாரணமாக நடக்கக் கூடியவை. இவைகள் நடக்கும் போது அவரவர் குழந்தைகளை பெற்றோர் கண்டிப்பதில்லை.

தன் குழந்தை தவறு செய்யும் போதெல்லாம் ‘குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும்’ என்று சாக்குபோக்கு சொல்லும் பெற்றோர்களே அதிகம். அதே பெற்றோர் பிற குழந்தைகள் தவறு செய்து தன் குழந்தைக் பாதிக்கப்படும்போது குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதில்லை என்று பிற குழந்தையின் பெற்றோர்களிடம் ஆதங்கப்படுவர்.

இந்த மனப்பான்மை அறவே கைவிடப்படவேண்டிய ஒன்று. யார் குழந்தை என்ற கேள்வியை விட்டுவிட்டு பொதுவான மனநிலையில் பிரச்சனைகளை அணுகினால் ஒரே வீட்டில் எல்லா குழந்தைகளுமே மகிழ்ச்சியாக வளர முடியும். பெற்றோர்களிடையேயும் சங்கடங்கள் வளராது.

சிறு குழந்தைகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்து எப்போது விளையாடினாலும் பெற்றோர் யாராவது ஒருவர் அவர்களின் அருகில் இருந்து மேற்பார்வையிடுவது நல்லது. தீவிரமாக கண்காணித்து வரும்போது எந்த குழந்தையாவது கோபம் கொண்டு வெறிச்செயல்களில் ஈடுபட்டாலும் துவக்கத்திலேயே அதனை தடுத்துவிட வேண்டும்.

தொடர்ந்து பிரச்சனைகள் இன்றி விளையாட ஏதுவான சூழ்நிலையை உருவாக்க பெற்றோர் உதவ வேண்டும். சிறுவயதில் இவ்வாறு விளையாட பழக்கி விட்டால் பின்னர் பெரியவர்களானதும் நல்ல நட்புடன் மற்றவர்களுடன் இருக்கும் குணம் குழந்தையின் ஆளுமையில் ஊறிப்போய்விடும்.

உங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பியின் குழந்தைகள் உங்கள் குழந்தைகளை அடித்து விளையாடுகிறார்கள் என்றால் அதைக் கண்டு மன எரிச்சல் அடைய வேண்டாம். நேரடியாக அவர்களின் குழந்தைக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுக்கும் உரிமையும், அதையும் மீறி தவறு செய்யும் போது கண்டிக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு.

நம் குழந்தை என்ற பாசத்தின் போர்வையில் குழந்தைகளின் ஆளுமையை அழிப்பது பெற்றோர் தான். நல்ல குழந்தைகளை உருவாக்குவது என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு குழந்தைகளை வளர்த்தால் வருங்கால மனங்கள் வளமானதாக இருக்கும்.

தவறான வழிமுறைகளை கடைபிடித்து வன்முறைக் குழந்தைகளை உருவாக்காதீர்.

குடி, போதை ஊசி, பெண்கள்…! வீழ்ந்த அபார நடிகர்..! இறந்த இரவு அந்த காட்சி…!! இறைவா…?!

சிவந்த நடிகர்கள் மட்டுமே சினிமாவில் வெற்றி பெற முடியும் என்று ஒரு காலகட்டம் இருந்தது..!

அதை உடைத்து கருப்பு நடிகர்களும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்தவர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவரைத் தொடர்ந்து பூ விலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் முரளி..!

தனது ஆழமான நடிப்பால் தமிழ் திரையைக் கட்டிபோட்டவர்..! ஆனால் இவருக்கு  குடிப் பழக்கம் ஆரம்பித்தது.

இதனால் நல்ல படங்கள் இவர் கை விட்டுப் போக படங்கள் இல்லாமல் வீட்டில் அடைந்தார்..! மீண்டும் புது வசந்தம் படத்தின் மூலம் மறு பிறவி எடுத்தார்.

தொடர்ந்து அற்புதமான கதைகள் தேடி வர மீண்டும் பிசி ஆனார். தொடர்ந்து வெற்றிப் படங்கள்..! மீண்டும் ஜால்ராக்கள் இவரை திசை மாற்றி குடி, பெண்களை பழக்கப் படுத்தினார்கள்..!!

முடிந்தது கதை. மீண்டும் சூட்டிங் சரியாகச் செல்லாமல் பெயரைக் கெடுத்துக் கொண்டார். இவருக்கு இதே வேலையாகப் போய் விட்டது என்று வெறுத்துப் போன இயக்குனர்கள் இவரை ஒதுக்கினர்.

படங்கள் இல்லாமல் வீட்டில் முடங்கினார். இவரின் உடல் நிலையை குடும்பத்தினர் சரி செய்தனர். பி ஆர் ஓ மூலம் மீண்டும் வாய்ப்புத் தேட.. காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் மூன்றாவது முறையாக மறு பிறவி எடுத்தார்.

படம் வெள்ளிவிழா கண்டது. தினந்தோறும் என்கிற படமும் பெரிய வெற்றி பெற தனது பழக்கங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு நல்ல பிள்ளையாய் ஒரு ரவுண்டு வந்தார்..!

சமுத்திரம், ஆனந்தம், வானத்தைப்போல போன்ற படங்கள் பட்டையைக் கிளப்பின.அன்பான மனைவி இவரை நல்வழிப் படுத்தினார். கூடவே சென்றார்.

இயக்குனர்களுக்கும் புது முரளியைக் கண்ட மகிழ்ச்சியில் நிறைய வாய்ப்புகளை கொடுத்தனர்.

இப்போது தான் கேடு கேட்ட நண்பர்கள் மூலம் போதை ஊசிப் பழக்கம் வந்தது என்கிறார்கள். இது அவரது குடும்பதிற்கே கொஞ்ச நாள் தெரியாதாம்.

அப்படி தெரிந்த போது அதிர்ந்து போனார்கள். ஆனால் நிலைமை கைமீறிப் போய் விட்டதாக கூறுகிறார்கள்.

திரும்பவும் பெயர் கெட்டது.. பல படங்கள் பாதி சூட்டிங்கில் நின்றது. தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

நல்ல படங்கள் எல்லாம் பாதியில் நிற்க இயக்குனர்கள் கண்ணீர் சிந்தினர். வாழ்க்கையை இழந்து தவித்தனர். ஆனால் இது பற்றி எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் நடிகர் இல்லை.

வீட்டோடு முடங்கிக் கிடந்தார். கோபுரக் கலசம் விஷயத்திலும் இவர் பெயர் அடிபட்டது. அதில் ஒரு பெரிய கர்நாடக அரசியல் வாதி முரளியை மிரட்டி அச்சுறுத்தியாக அப்போது தகவல் வெளியாகி பெரும் பரபரப்பானது…!

அதில் மிகுந்த மன நெருக்கடிக்கு ஆளானாராம் முரளி. எப்படி மீள்வது என்று தெரியாமல் படுத்த படுக்கையில் வீழ்ந்தார்.

ஆனாலும் அந்த ஊசி விஷயம் மட்டும் தொடர்ந்தது என்கிறார்கள்.அவர் இறந்த அன்று இரவு மீண்டும் ஒரு கொலை மிரட்டல்வந்ததாம்..

கடும் அதிர்ச்சிக்கு ஆளான நடிகர் அதிக அளவில் மருந்து எடுத்துக் கொண்ட தாகவும் அதனால் அது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என்று இப்போது பேசுகிறது கோடம்பாக்கம்.

எது உண்மை என்பது மறைந்த அந்த அபார நடிகருக்கு மட்டுமே தெரியும்..!!! கொடுமை.

உதடு வெடிப்பை நீக்கும் அற்புத மருந்து இதுமட்டும் தான்!

உதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இது. குளிர்காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது.

இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளும் கூட வேகமாக வறண்டு போகிறதா? என்ன தான் வகை வகையான உதடு பாம்கள் தடவியும் கூட இந்த பிரச்சனை தீரவில்லையா? என்ன செய்வது என்பதே புரியவில்லையா? கவலையை விடுங்கள்.

நமக்கு கை கொடுக்க தான் இயற்கையான பொருள் இருக்கிறது அல்லவா?  அது தான் தேங்காய் எண்ணெய். அதிலுள்ள பல்வேறு வகையான உடல்நல பயன்கள் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான்.

தலைமுடியில் ஆரம்பித்து பாதம் வரை அதை பயன்படுத்தலாம். அது நமக்கு அளித்திடும் பல பயன்களில் ஒன்று தான் உதடு வெடிப்பிற்கான தீர்வு.

பொதுவாகவே நம் உடலில் வெட்டுக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனே தேங்காய் எண்ணெய்யை அங்கே தடவ சொல்லுவார்கள். அதற்கு காரணம் அதிலுள்ள குணப்படுத்தும் ஆற்றலே. அதே தான் உதடு வெடிப்பிற்கும்! ஏற்கனவே சோதிக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு இந்த ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். பஞ்சுருண்டையை கொண்டு இந்த கலவையை உங்கள் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

பின் உதட்டின் மீது விரல்களை கொண்டு வட்ட வடிவில் ஒரு நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து, உங்கள் உதடு மென்மையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இறுதியில் ஒரு துணியை கொண்டு உதட்டை துடைத்து விட்டு அதனை காய வையுங்கள்.

9 மாதங்களில் 2200 பேர் வீதி விபத்துக்களினால் மரணம்.!

இலங்கையில் இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் 2200 பேர் வாகன விபத்தினால் மரணித்துள்ளதாகவும் இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் குறித்த வாகன விபத்துக்களினால் அதிகளவிலான பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற பாதுகாப்பு கடவை, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியமை, வீதி ஒழுங்கு முறைமைகளை கடைப்பிடிக்காமை போன்றன காரணமாகவே அதிக வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

அதேநேரம், இவ்வருடம் இடம் பெற்ற விபத்துக்களில் ரயில் விபத்துக்கள் கணிசமான அளவு அதிகரிப்பை காட்டுகின்றன. இதற்கான சிறந்த உதாரணமாக கடந்த சி ல மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்ற யுவதிகள் இருவர்  பாடல்களை கேட்டுச் சென்றுள்ள நிலையில் ரயிலில் மோதுண்டு தூக்கி எறியப்பட்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது மாத்தறை பகுதியில் இளைஞர் ஒருவர் அதிவேக ரயில் ஒன்று எதிர்திசையில் பயணித்துக்கொண்டிருந்த வேளை ரயிலின் முன்பாகச் சென்று தண்டவாளத்தில் தனது கழுத்தை வைத்து தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவ்வாறான ரயில் விபத்துக்கள் இவ்வருடத்தில் கணிசமான அளவு இடம்பெற்றதில்   அதிகளவான இளம் உயிர்கள் காவுகொள் ளப்பட்டன. இவற்றை வெறுமனே வீதி விபத்துக்கள் என்று மட்டு வரையறுத்து விட முடியாது.  காரணம் இங்கு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட சம்பவங்கள் பலவும் பதிவாகியுள்ளன. குறிப்பாக இளைஞர்கள் தற்கொலை அதிகரித்துள்ளது.

மறுபுறத்தில் வாகன சாரதிகளின் கவனயீன போக்கு மற்றும் வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாலும் நாளாந்தம் ஒருவர், இருவர் என்றவாறு வீதி விபத்துக்களில் உயிரிழந்தோரின் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது.

அண்மையில் கெகிராவ பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த டிரக்டர் வாகனம் ஒன்றை மற்றுமொருவர் உயிர்பித்து செலுத்திச் சென்ற போது அவ்வழியே வந்த ஒருவர் மீது குறித்த டிரக்டர்  மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.   அப்பகுதியிலேயே  டிரக்டர் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பின்பு கற்பிட்டி  பகுதியில் வேகமாக பயணித்த வாகனம் ஒன்று ஒருவர் மீது மோதிவிட்டுச் சென்றதில் மொஹமட் லாபீர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து மொனறாகலை  பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளதில் முச்சகர வண்டியொன்றின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து கண்டி தெஹியத்தகண்டிய வீதியில் பயணிகளை ஏற்றிவந்த  தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று தலைகீழாக புரண்டதில் 11 பேர் கடுமையான காயங்களுக்கு இலக்காகி மேலும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். அதேபோல் காலி, மாத்தறை வீதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்தொன்றில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல இளம் நடிகை ஒருவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த போது  அவரது கார் வழுக்கிச் சென்று அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின்  மீது மோதியதில் குறித்த நடிகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்த சம்பவம் மீரிஹானை பகுதியில் இடம்பெற்றது.

கடந்த வருடத்தில் பதிவான விபத்துக்களை தொகுத்து போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் 2590 அபாயகரமான உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.   13095 சிறிய விபத்துக்கள் பதிவாகியுள்ளன.   13514 விபத்துக்களில் வாகனச் சேதங்களும் இடம்பெற்றுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் 10147 விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள்  மூலமாகவும் 4429 விபத்துக்கள் லொறியின் மூலமும் 4858 வித்துக்கள் இரட்டைச் சக்கர வாகனங்கள் மூலமாகவும் 2877 விபத்துக்கள் தனியார் பஸ்களின் மூலமாகவும் 6871 விபத்துக்கள் முச்சக்கர வண்டிகள் மூலமாகவும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் கடந்த வருடத்தில் 142 பேர் மட்டுமே இழப்பீடுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் 72 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ள போதிலும் ஏனைய 70 பேரினதும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது விபத்தில் இறந்தவர்களுக்கு 4 மில்லியன் ரூபாவும் காயங்களின் போதான மருத்துவ செலவுகளுக்காக 8.4 மில்லியன் ரூபாயும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாளாந்தம் பதிவாகும் விபத்துக்களின் அளவும் அவற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் குறைந்தவண்ணம் இல்லை. இவ்வாறான நிலையில் இது தொடர்பாக  மக்கள் அவதானமாக செயற்படுகின்றனரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறு அதிகரித்துச் செல்லும் விபத்துக்களை கட்டுப்படுத்த சட்டங்கள் பல நடைமுறைக்கு வந்தபோதும் அவற்றுக்கு எந்த அளவு மதிப்பளிக்கப்படுகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எவ்வாறாயினும் இவ்வாறான சட்டங்களும் எமது உயிர்பாதுகாப்பினை கருத்திற் கொண்டுதான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து செயற்படுதல் சிறதந்ததாகும்.

அதேநேரம், அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு  செலவு திட்டத்திலும் வீதி விதிகளை மதிக்காவண்ணம் செயற்படுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தின் தொகையில் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டங்கள் குறித்து பலவாறான விமர்சனங்கள் எழுந்த போதும் அவை பாதுகாப்புக்கு ஏதுவான காரணிகளாக அமையுமாயின் வரவேற்கத்தக்கதாகும்.

மேலும் வழமைக்கு மாறாக இவ்வருடத்தின் முதற்பகுதியில் சிறுவர்களினால் நிகழ்த்தப்பட்ட இரு விபத்துக்கள் பதிவாகியிருந்தன. எனவே இவ்வாறான விடயங்களிலும்   பொறுப்புடன் செயற்பட வேண்டியது காலத்துக்கு ஏற்ற  விடயமாக அமையும்.

எப்படியோ குவியும் பணம்..! தறிகெட்ட வாழ்க்கை..! குடி கும்மாளம்..! பயங்கர நோய்..! பரிதாப உண்மை..!?

சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும்  பரிதாபம் ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. கடைசியாக சபர்ணா என்கிற அழகான நடிகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்..!

நிர்வாணமாக..! வீடெங்கும் மதுப் பாட்டில்கள்..மாத்திரை மருந்துகள்..போதைப் பவுடர்கள்..! அப்பா, அம்மா இருந்தும் கூட தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார் சபர்ணா..!

அவர்பற்றி சின்னத்திரை வட்டாரங்கள் கூறும் போது, சபர்ணா பயங்கர மாடர்ன் கேர்ள். புதிதாக வாழவேண்டும். யார் தயவும் இல்லாமல் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்..!

ஆடம்பரப் பிரியை…! மார்கெட்டில் எது புதிதாக வந்தாலும் முதல் ஆளாக வாங்கி விடுவார்..! ஆண் நண்பர்கள் மிக அதிகம்..!

யாராவது டின்னருக்கு அழைத்துப்போய் விடுவார்கள்..! அவரது வீட்டிற்கும் ஆனா நண்பர்கள் கூட்டம் அலை மோதும்..! அப்படிப் பட்டவர் சமீப காலமாக மிகவும் சோர்ந்து இருந்தார்..!

உடல்நலம் சரி இல்லை என்றார்.. படபிடிப்புகளிலும் அதிகம் காணவில்லை.. என்கிறார்கள்..!

முன்பு இதே போல ஒரு   சின்னத்திரை நடிகை  கேன்சர் என்று டாக்டர்கள் கூறி விட, மனம் உடைந்து தூக்கில் தொங்கி இறந்து போனார்..!

அதே போல சபர்ணா ஏதாவது பாதிப்பு உள்ளாகி இருக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்..!!

சபர்ணா இறந்த அன்று இரண்டு மூன்று பேர் மது குடித்திருகிரார்கள் என்று கருதுகிறது காவல் துறை…!

அளவுக்கு அதிகமான பணம்..ஆண் நண்பர்கள்..எப்போதும் குடி கூத்து.. ‘அந்த’ விஷயங்களில் குவியும் லட்சங்கள்..தறிகெட்ட வாழ்க்கை..!

கட்டுப்பாடுகளும் கிடையாது..! அதனால் குறுகிய காலத்தில் எல்லாம் அனுபவித்து விட்டு மனம் உடைந்து செத்துப் போகிறார்கள்.

பரிதாபம் தான்..!!

விலைமாதுகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பொதுஇடத்தில்..! அந்த கொடுமையை நீங்களே பாருங்க..!

அமெரிக்கா தேர்தலில் குறைவான ஓட்டுகள் பெற்றாலும் செனட் உறுப்பினர்கள் ஆதரவில் தொழில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

டிரம்பை அதிபராக்க கூடாது என அமெரிக்காவில்  பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது.

இவர் வெட்ட வெளியில் அழகிகளுடன் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை..

ஹெர்பீஸ் வைரஸ் நோயின் அறிகுறிகள் இவைகள் தான்!

உண்மையில் இதற்கும் பல்லி எச்சத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது ஒரு தொற்றுநோய்.Herpes simplex virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

ஹெர்பீஸ் வைரஸில் பல உப பிரிவுகள் உண்டு. கொப்பளிப்பான், நரம்புக் கொப்பளிப்பான், பாலியல் ஹெர்பீஸ் போன்றவை வேறு உதாரணங்களாகும்.

பொதுவாக இது நேரிடையாகத் தொற்றும்.
ஒரு முறை தொற்றினாலும் கிருமி நரம்புகளில் மறைந்திருந்து மீண்டும் மீண்டும் நோயை ஏற்படுத்த வல்லது.

இது பொதுவாக உதடுகளிலேயே ஏற்படுகிறது.

அதுவும் ஓரமாக, நடு உதட்டில் அல்ல. சிறு சிறு கொப்பளங்களின் கூட்டமாகத் தோன்றும்.

பல குழந்தைகளில் நாசித் தூரங்களிலும், வாயிற்கு உள்ளும் தோன்றும் .

அரிதாகக் கன்னங்களிலும் தோன்றுவதாகச் சொல்லப்படுகிறது.

முதன் முறை வரும்போது

முதல் முதலில் முக்கிமாகக் குழந்தைகளில் வரும்போது வேதனை இருக்கும்.

உதடுகளில் மட்டுமின்றி நாக்கிலும் வரலாம்.

கொப்பளங்கள் உடைந்து சிறிய புண்போலத் தோற்றமளிக்கும்.

பின் உலரத் தொடங்கும்போது மஞ்சள் ஆடைபோலப் பிடித்து, காய்ந்து மறையும். 3 முதல் 14 நாட்கள் வரை எடுக்கலாம். புண்கள் வாயிலிருக்கும்போது எச்சில் ஊறுவது அதிகமாகவும், வாய் மணமும் இருக்கும்.

கடுமையாக இருந்தால் மாத்திரம் குளிர், மெல்லிய காய்சல், காது வலி போன்றவை சேர்ந்து வரலாம்.

கட்டிளம் பருவத்தினரில் முதன் முதலில் வரும்போது வாய்ப் புண்களுக்கு பதிலாக தொண்டை வலியாக தோற்றலாம்.

மீண்டும் வரும்போது

திரும்ப வரும்போது முதல் முறை வந்ததுபோல கடுமையாகவோ வேதனை அளிப்பதாகவோ இருப்பதில்லை. வருடத்தில் ஓரிரு முறை வரலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வருவதுண்டு. ஆயினும் முதல் வருடம் கழிந்த பின்னர் நீண்ட இடைவெளிகளிலேயே வரும்.

ஆனால் பெரும்பாலும் தடிமன் காய்ச்சல் வரும்போதுதான் அவ்வாறான கொப்பளங்கள் போடுவதுண்டு. இதனால் ஆங்கிலத்தில் இவற்றை cold sores என அழைப்பார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல இவை கடுமையாக இருப்பதில்லை. வந்தாலும் குறுகிய காலத்திற்குள் சுமார 5-6 நாட்களுக்குள் குணமாகிவிடும். பெரும்பாலும் முன்பு வந்த அதே இடத்தில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ள டொனால்ட் ட்ரம்ப்!

கடந்த வாரம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்காக வாக்களித்தவர்களில் அதிகளவானோர் வெள்ளை இனத்தை சேர்த்த முதியவர்கள் என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்பிற்கு எதிராக தற்போதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் சில நகரங்களில் வன்முறையாக வெடித்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியதன் மூலம் அமெரிக்க தேசியவாதம் தலைதூக்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அமைச்சரின் கருத்து குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தேசியவாதத்தின் வெளிப்பாடாக பார்க்கவில்லை என அரசியல் கட்டுரையாளரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான பிலிப் ஷாந்த தெரிவித்துள்ளார்.

எனினும் அரசியல் மோதலுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க குடிமக்கள் ட்ரம்ப் தெரிவாகியுள்ளதன் ஊடாக தங்களுக்கு விரைவாக பதில் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ட்ரம்பின் வெற்றி ஒரு போதும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வர்த்தகத்தின் முடிவாக காணப்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டின் பொதுவான விடயங்களுக்கமைய அரசியல் முனைவாக்கமடைந்து தலைவர்கள் உயர்வடைந்துள்ளனர். இதனை தேசியவாதமாக நாங்கள் பார்க்க முடியாது. இவ்வாறான தெரிவு தற்போதைய பிரச்சனைகளுக்கு பதிலாக அமையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்பாராதவிதமாக தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் நாட்டில் உள்ள சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு ட்ரம்பினால் பதில் தேடுவெதென்பது சவாலான ஒரு விடயமாகும்.

வெற்றியின் பின்னர் தனி தேசியத்தில் கிடைக்கின்ற மக்கள் ஆதரவில் பதில் தேடுவதே ட்ரம்ப்புக்கு உள்ள சவாலாகும் என பிலிப் ஷாந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் மனைவியும் இரு பிள்ளைகளும் வெட்டிக்கொலை!!: நிர்வாணமாக நின்றார் கணவன்! காரணம்??

குடும்பத்தலைவன் ஒருவன் வாளொன்றினால் தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் வெட்டிச் சரித்த சம்பவத்தினால் கிளிக்குஞ்சுமலைக் கிராமமே சோபை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது.

திருகோணமலை கன்னியா உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காவது ஒழுங்ககையில் உள்ள வீடொன்றிலேயே இந்தக் கோரச் சம்பவம்இ நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் சந்தேகநபரான அக்குடும்பத்தின் தலைவனான ராஜலக்ஷ்மனன் (வயது 35) என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்தச் சந்தேகநபருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை என்று அறியமுடிகின்றது. இந்தச் சம்பவத்தில் தனது மனைவியான ராஜலக்ஷ்மனன் நித்தியா (வயது 32) இவரது மகள்களான காயத்திரி (வயது 10) சந்தியா (வயது 08) ஆகியோரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

வீட்டுக்குள் வைத்து மூவரையும் வெட்டிச் சாய்த்தமையால் அந்த வீடே இரத்தவெள்ளக் காடாக காட்சியளித்தது தரைகள் இரத்தத்தினால் தோய்ந்திருந்த நிலையில் சுவர்களில் இரத்தக் கறைகள் படிந்திருந்தன. அவ்வீட்டின் ஒரே அறையிலேயே அந்த மூவரும் கிடந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து அந்த வீட்டை குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்திய பொலிஸார் அவ்வீட்டுக்குள் யாரும் நுழைவதற்கு இடமளிக்கவில்லை.

எனினும்இ வீட்டு யன்னல்கள் மற்றும் கதவிகளின் ஊடாகப் பார்க்கும் போது அங்கு பெரும் கோரச் சம்பமொன்று இடம்பெற்றுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. வழமையாகவே கலகலப்பாக இருக்கின்ற அந்தக் கிராமம் இந்தச் சம்பவத்தினால் சோபையிழந்து சோகமயமாகக் காட்சியளிக்கின்றது.

சம்பவ தினமான நேற்றுக் காலையில் மனைவியையும் தன்னுடைய பிள்ளைகளையும் மனைவியின் அக்காவின் வீட்டுக்கு வழமையாகவே அழைத்துச் செல்லும் சந்தேக நபர் அவ்வாறே அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் வந்ததும் மனைவியின் அக்கா கின்னியாவுக்குக் கடைக்குச் சென்றுள்ளார். அவ்வீட்டிலிருந்த அம்மம்மா உறவு முறையான வயோதிபப் பெண்ணும் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

இந்நிலையிலேயேஇ காலை 11 மணியளவில் அவ்வீட்டிலிருந்து அபயக் குரல் கேட்டுள்ளது. இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அக்குரல் அமையடைந்தது. சத்தம் வந்த திசையில் உள்ள வீட்டில் ஏதாவது விபரீதம் இடம்பெற்றிருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் அவ்வீட்டை நோக்கி படையெடுத்தனர். அபயக்குரல் காற்றோடு காற்றாக கலக்க அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களே அவ்வீட்டைநோக்கி விரைந்துவிட்டனர்.

எனினும் வீட்டுக்குள் யாரும் போகவில்லை. வீட்டிலிருந்த கதவுகள் மற்றும் யன்னல்கள் யாவும் மூடியிருந்தமையால் அயலவர்களின் உதவியுடன் அக்காவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் அறிவிக்கப்பட்டது. உப்புவெளிப் பொலிஸார்இ ஸ்தலத்துக்கு உடனடியாக விரைந்துவந்தனர்.

அவ்வீட்டில் ஏதோவொரு விபரீதம் இடம்பெற்றுள்ளதை உணர்ந்துகொண்ட பொலிஸார் தங்களுடன் இரண்டொருவரை கூரையின் மீதேற்றிஇ கூரைத்தகட்டைக் கழற்றிப் பார்த்துள்ளனர். அதுவரையிலும் சந்தேகநபரான ராஜலஷ்மனன் வாளை ஏந்தியவாறுஇ நிர்வாணக்கோலத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்னும் சில கூரைத்தகடுகளைக் கழற்ற முற்படுகையில் அவற்றிலிருந்த சிறிய துண்டொன்றுஇ சந்தேகநபரின் உடலில் விழுந்துவிடவேஇ சந்தேகநபர் வாளுடன் சரிந்துவிட்டதாகவும் அதன்பின்னரே கதவுகளை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து சந்தேகநபரைக் கைதுசெய்ததுடன் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியிருந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுமதிக்க எடுத்துச்சென்றுள்ளனர். எனினும் அந்த மூவரும் மரணமடைந்துவிட்டனர். மயக்கமடைந்த நிலையில் இருந்த சந்தேகநபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். குறித்த சந்தேகநபர் பயபக்தி உடையவர் என்றும் தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள கோயிலில் அவ்வப்போது பூஜைவழிபாடுகளில் ஈடுபடுபவர் என்றும் தெரிவிக்கும் அயலவர்கள் கணவனும்-மனைவியும் புரிந்துணர்வுடன் வாழ்பவர்கள் என்றும்இ தங்களுடைய பிள்ளைகள் இருவரையும் அன்பாகவும் பாசத்துடன் கவனிப்பவர்கள் என்றும் அறியமுடிகின்றது.

சம்பவ தினமான நேற்றுஇ தனது இரு பிள்ளைகளையும் தனது வீட்டில் வைத்துஇ மஞ்சள் நீரினால் நீராடச் செய்த பின்னரே தனது மனைவியின் அக்கா வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பில்

பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இன்று (நேற்று) காலை 11 மணியளவில் தாயும் அவருடைய பெண் பிள்ளைகள் இருவரும் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இரத்தத்தினால் தோய்ந்திருந்த நிலையில்இ அந்த வீட்டுக்குள்ளிருந்த மூவரும்இ கிராமவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

எனினும் அந்த மூவரும் மரணமடைந்திருந்தனர். இந்நிலையில் இந்த முக்கொலையின் சூத்திரதாரி சம்பவத்தில் மரணமடைந்துள்ள அந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையெனக் கூறப்பட்டது. இதனையடுத்து கன்னியா கிளிக்குஞ்சுமலையைச் சேர்ந்த 34 வயதான ராஜலஷ்மனன் என்பவர் உப்புவெளிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் எதற்காக இடம்பெற்றது என்பது தொடர்பில் சந்தேகநபரின் மயக்கம் தெளிந்ததன் பின்னரே அறியமுடியும் என்று தெரிவித்த உப்புவெளிப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.familly maiviiiaada

சிறுநீரில் இரத்தம் இருக்குமாயின் அது புற்றுநோய்கான அறிகுறியாம்!

சிறுநீரில் இரத்தம் இருக்குமாயின் அது புற்றுநோய்க்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தடவையேனும் சிறுநீரில் இரத்தம் தென்படுமாயின் அது சிறுநீரகப் புற்றுநோய்கான ஒரு அறிகுறி என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களில் சிறுநீரகப் புற்றுநோய் மூன்றில் ஒரு வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2011 ஆண்டு புற்றுநோயினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் ஏழு வீதத்தால் அதிகரித்து 3 ஆயிரத்து 500 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைத்தல் மற்றும் உடற்பருமன் போன்ற காரணங்கள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளே சிறுநீரக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிப்பதாக இங்கிலாந்தின் உடற்சுகாதாரப் பிரிவினர் கூறியுள்ளனர்.

சிறுநீரகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியும் பட்சத்தில், உயிரிழப்பு வீதத்தை குறைக்கலாம் எனவும் சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எச்சரிக்கை: நுளம்புச் சுருளொன்று 75-137 சிகரெட்டுகளுக்கு சமமானது!

நுளம்புச் சுருளொன்றின் மூலம் வெளிவரும் புகையின் அளவானது 75-137 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானதென அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் வீதி வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் வெளிப்புற காற்று மாசடைவை விட வீடுகள் மற்றும் வாகனங்களின் உட்புறத்தில் அதிக காற்று மாசடைவதாக (indoor air pollution) புதிய ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விறகடுப்பு, நுளம்புச் சுருள், வாசணை திரவியங்கள், சாம்பராணி, கற்பூரம் முதலியவை வீட்டில் உபயோகிப்பதனாலேயே காற்று அதிகமாக மாசடைவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த புகையின் காரணமாக ஒரு வருடத்தில் 43 இலட்ச உலக மக்கள் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் இதில் சிறு குழந்தைகளும் பெண்களுமே அதிகம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

20% மக்கள் செய்த தவறுக்கு 80% மக்களுக்கு தண்டனையா? விஜய் ஆவேச கேள்வி

பிரதமர் நரேந்திரமோடி  கடந்த வாரம் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தவுடன் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றியது. இதனால் ஏழை, எளிய மக்கள் பலவழிகளில் பாதிக்கபட்டனர். எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுத்து வந்தாலும் பெரும்பாலானோர் இந்த நடவடிக்கையை ஆதரித்தும் வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் படும் இன்னல்களுக்கு மாற்று வழி தேடவும் அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இளையதளபதி விஜய் சற்றுமுன்  தனது கருத்தை செய்தியாளர்கள் மூலம் பகிர்ந்து கொண்டார். விஜய் கூறியது இதுதான்:

பிரதமர் எடுத்துள்ள இந்த முடிவு உண்மையில் மிக மிக துணிச்சலான முடிவு என்பதை முதலில் தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டிற்கு தேவையான, வரவேற்கத்தக்க முடிவு என்பது மட்டுமின்றி நம் நாட்டின் பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை நிச்சயம் வளர்க்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரிதாக இருக்கும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு சின்ன சின்னதாக இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த பாதிப்புகள் அந்த நோக்கத்தை விட பெரியதாகி விடாமல் நாம் எல்லோரும் பார்த்து கொள்ள வேண்டும்

பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளான சாப்பாடு, மருந்து பொருட்கள் வாங்குதல், வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பாமல் இருப்பதி, தியேட்டர்கள், மால்கள் வியாபாரிகள் ஆகியோர்கள் வியாபாரம் இன்றி பாதிக்கப்படுவதை தவிர்த்திருக்கலாம்

ஒருசில செய்திகள் படித்தவுடன் எனது மனதை பாதித்தது. பேத்தியின் திருமணத்திற்கு நிலத்தை விற்ற ஒரு முதிய பெண், தன்னிடம் உள்ள ரூபாய்கள் செல்லாது என்பதை அறிந்து தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற குழந்தை ஒன்று ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறிய காரணத்தால் சிகிச்சை மறுக்கப்பட்டு மரணம் அடைந்த போன சம்பவம் ஆகியவற்றை  தவிர்த்திருக்கலாம்

நம் நாட்டில் 20% பணக்காரர்கள் இருப்பார்களா? அவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் செய்த தவறுக்காக மீதியுள்ள 80% மக்கள் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

நான் திரும்ப திரும்ப கூறும் ஒரு விஷயம் என்னவென்றால் இதுவரை யாரும் செய்யாத, யோசிக்க கூட இல்லாத ஒரு விஷயத்தை இந்த அரசு செய்தது உண்மையிலேயே சாதனைதான். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற முக்கியமான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே ஆலோசித்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து

இன்றுமுதல் ஓரளவுக்கு நிலைமை சீரடைந்ததாக கேள்விப்பட்டேன். ஆனாலும் இன்னும் கிராம உள்ள மற்றும் சீனியர் சிட்டிசன் ஆகியோர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க இந்த அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்