ஆஸியில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து கொலை

அவுஸ்திரேலியா – சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பிரபல பாதாள குழு தலைவர் ஒருவர் நடு வீதியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பஸ்குலோ பர்பரோ என்ற 35 வயது மதிக்கத்தக்க பாதாளகுழு தலைவனே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் நடு வீதியில் கொல்லப்பட்டு  இரத்த வெள்ளத்தில் கிடந்த பர்பரோவின் சடலத்தை அகற்றியுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த போது காரில் வந்த சிலர் பர்பரோவை கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.