நாடாளுமன்றில் பலரை சாப்பாட்டால் கதி கலங்க வைத்த ஜனாதிபதி மைத்திரி! இப்படியும் உலகில் மனிதர்களா

இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளார்.

அதனை நிரூபிக்கும் வகையில் மற்றுமொரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றில் இன்று வரவு செலவுத்திட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால தனக்கான மதிய நேர உணவை வீட்டிலிருந்து கொண்டு சென்றுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் எளிமையான முறையில் அங்கு உணவருத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

இலகுவாக நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்யும் முறை!

நெல்லிக்காய் தயிர்ப் பச்சடி

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 10
மிளகு – 4
தயிர் – இரண்டு கப்
உப்பு – தேவைக்கேற்ப‌
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை

நெல்லிக்காயை கழுவி கொட்டை நீக்கி, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். மிளகை நன்கு பொடிக்கவும்.

வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்தபின், நறுக்கிய நெல்லிக்காய், மிளகுத்தூள் போட்டு வதக்கவும்.

இதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி பின் இறக்கி வைத்து ஆறீயதும் தயிர் சேர்த்து பரிமாறவும்.

இதை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பலன்கள் –
பித்தத்துக்கு நல்லது.
ரத்த விருத்தி உண்டாகும்.

மஞ்சளின் மகத்துவமான மருத்துவ குணங்கள்!

பெண்கள் திருமணம் முடிந்தபின், மஞ்சள் பூசுவதும், மாங்கல்ய கயிற்றுக்கு மஞ்சள் பூசுவதும், மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தைத் திலகமிட்டுக் கொள்வதும், கணவன் இறக்கும்வரை ஒரு பண்பாட்டுச் செயலாக வாழ்வதும் எத்தனை புனிதமான இடத்தில் மஞ்சள் உள்ளது என்பதையே காட்டுகிறது.

இத்தனை சிறப்புப் பண்புகளைப் பெற்ற மஞ்சள், உணவுப் பொருளாகவும், உணவுப் பொருளுக்கு சுவை, மணம் தருவதுடன், உணவுப் பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பும் தருகிறது. மஞ்சளை மருந்தாக ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப்படுத்தினார்கள். தேர்ந்த மருத்துவர்கள் மஞ்சள் கலந்த மருந்து மூலம் எத்தனை கொடிய நோய்களையும் போக்கி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளனர்.

குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமும், சந்தேகமும் இல்லாமல் பயிற்சியும் இல்லாமல் மஞ்சள் மூலம் பல பிணிகளைப் போக்க முடியும்.

மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது. கெடுதல் செய்யும் கிருமிகளையும் அழிக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.

பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கலுக்கு உள்ளுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.

மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.

மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.

குடல் நோய் எதுவாக இருந்தாலும், மஞ்சள் சூரணம் உட்கொண்டால், விரைவாகவும், நிரந்தரமாகவும் நோய் தீரும்.

மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல், துர்நாற்றத்தைப் போக்கிவிடும். மேலும், வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும். மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர்களை வெளியேற்றிவிடும். மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி துர்நாற்றத்தை நீக்கும். மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்துவிட்டால் அனைத்து வகையான வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும். மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுப்பதால், தொற்றுக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும். மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேக ரணம், மேகப் படைகள், வட்டமான படைகள், விஷக்கடிகள் நீங்கும்.

தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும். மஞ்சளை இலுப்ப எண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக இழுத்தால், தலைவலி நீங்கும்.

மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, ரணங்களுக்கும் புண்களுக்கும் போட்டால், சீக்கிரத்தில் ஆறாத ரணங்கள் ஆறும்.

மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும். மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும். அடிபட்ட புண்ணுக்குப் போட, சீக்கிரம் புண்கள் ஆறிவிடும்.

மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும். அடிபட்ட வீக்கம், ரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போடுவதால், ரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைகிறது.

புகழ்பெற்ற, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புத்தூர் எலும்பு முறிவு சிகிச்சைக்கு கட்டுப்போடும் மருந்தில், மஞ்சள் முக்கியமான பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.

மஞ்சள் மங்கலகரமானது. உணவு மூலம் சேர்ந்தால், பல பிணிகள் நீங்கிவிடுகின்றன.

மஞ்சளின் மருத்துவ குணத்தை உணர்ந்து, எளிய முறையில் பணச் செலவில்லாமல், வீட்டில் வைத்துக்கொண்டு உபயோகிப்பதால், அநேக நன்மைகளை அடையலாம். விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகாவது, மஞ்சளை மனதார ஏற்றுக்கொண்டு, பல பிணிகளை நீக்குங்கள். பணவிரயம், கால விரயம் இருக்காது. மீண்டும் தமிழ் மருத்துவம் வருங்கால சந்ததியினருக்கு உதவட்டும்.

ஆசியாவின் கேந்திர மையமாக இலங்கை!

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று 2017ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வாசிப்பின் போது, இலங்கையை, ஆசியாவின் கேந்திர மத்தியநிலையமாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக இலங்கையை பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைய செய்து நாட்டின்பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, இலங்கையை சர்வதேச பொருளாதார மற்றும் கேந்திரமையமாக மாற்றுவதே இலங்கை அரசின் திட்டம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கதெரிவித்துள்ளார்.

புதிதாக துறவியாகினால் பணமா?

புதிதாக துறவியாக இணைபவர்களுக்கு ஓர் வாய்ப்பு ஏற்ப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும்,புதிதாக துறவியாக இணைபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 2,500 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படும்.

இதற்காக, 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நெல்லையில் காதல் பிரச்னையால் துப்பாக்கிச் சூடு!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குமார புதுக்குடியிருப்பில் காதல் பிரச்னையால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. சுசீலா, குமார் என்ற இருவர் காயமடைந்துள்ளனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வள்ளியூர் காவல்துறை இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை தொடர்ந்து தனது மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்தும் ஜெயம் ரவி

விஜய் தனது மகன் சஞ்சய்யை ‘வேலாயுதம்’ படத்தின் அறிமுக பாடலின் இறுதியில் சிறிது நேரம் நடனம் ஆட வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் தனது மகனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஜெயம் ரவி தற்போது நடிக்கவிருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தில்தான் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இப்படத்தை ‘மிருதன்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கவிருக்கிறார்கள்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். ‘மிருதன்’ படத்திற்கு பிறகு அதேகூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

விஜய் சேதுபதியோடு கைக்கோர்க்கும் த்ரிஷா!

தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸி மற்றும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இவர் ‘நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார். இதை சமீபத்திய பேட்டியில் த்ரிஷாவே உறுதிசெய்துள்ளார். மேலும் ரோமியோ ஜூலியட், கத்தி சண்டை படங்களின் தயாரிப்பாளர் நந்தகோபால் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

தொப்புளில் காட்டன் பஞ்சு! இதில் இவ்வளவு நன்மை இருக்கா?

இன்றைய காலகட்டத்தில் நம் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வும் விசித்திரமானதாக உள்ளன.

ஆம், உதாரணமாக, பூண்டு பற்களை தலையணையின் அடியில் வைத்து தூங்கினால், பல்வேறு அதிசயங்கள் நிகழும் என்பார்கள்.

இதைப் போலவே ஆல்கஹாலை கொண்டு கூட நோய்களை குணப்படுத்தலாம்.

சிறிது காட்டன் பஞ்சை எடுத்து அதை ஆல்கஹாலின் நனைத்து விட்டு கவனமாக தொப்புளில் வைத்து சிறு துணியால் மூடிவிட்டால் உடலில் பல்வேறு அதிசயம் நிகழ்கிறது.

இதனால் தசைப் பிடிப்பு, வயிற்று வலி, சளி, இருமல் குணமடைகின்றன.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியின் போதும் இவ்வாறு செய்வதால் வயிற்று வலி குறைகிறது.

உடல் எடை அதிகரிக்க விருப்பமா?

உடல் எடையை குறைப்பதற்காக முயற்சி செய்பவர்கள் மத்தியில் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள்.
எடையை குறைப்பதற்கு டயட் மற்றும் உடற்பயிற்சி என போன்ற வழிகள் இருக்கையில் நம் அன்றாட உணவு பழக்கங்களின் மூலம் உடல் எடையை அதிகரிக்கலாம்.

வாழைப்பழம் உடற்பருமனாக இரு‌ப்பவ‌ர்களு‌ம் மெ‌லி‌ந்த தேக‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌‌க்கு‌ம் வாழை‌ப்பழ‌ம் பய‌ன்தரு‌ம். அதாவது உட‌ற்பருமனாக இரு‌ப்பவ‌ர்க‌ள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வ‌ந்தா‌ல் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு ஒரு ‌நிலையான தன்மைக்கு வருவதால் உடற்பருமன் குறைவதாக மரு‌த்துவ ஆ‌ய்வுக‌ள் தெரிவிக்கின்றன. வாழைப்பழத்தில் அதிகளவில் கலோரிகள் உள்ளது எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பழமாக இருக்கும்.

ஒரு அத்திப்பழத்தில் 111 கலோரிகள் உள்ளது தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் எடையும் அதிகரிக்கும்.

அவகோடா எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் அதிகளவில் அவகோடா பழத்தை சாப்பிட வேண்டும். இவற்றில் 322 கலோரிகள் உள்ளது இதில் நல்ல கொழுப்புகள் அதிகம் இருப்பதால் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும்.

வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகளில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது. தினமும் சிறிதளவு உலர் பழங்களை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்க நிச்சயம் உதவும்.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

திருமணமான 4 நாளில் கணவரைப் பிரிந்து காதலனை கைப்பிடித்த காதலி

திருமணமான 4 நாட்களில் கணவனை பிரிந்து விட்டு, தான் காதலித்தவனை 2-வது திருமணம் செய்து கொண்டு வந்த புதுப்பெண்ணால் குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையை சேர்ந்தவர் ராமு, கூலி தொழிலாளி. இவருடைய மகள் துர்கா (வயது 21), குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் கேசவன் (24), அதே பகுதியைச் சேர்ந்தவர் துர்கா(21), இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் துர்காவை அவரது பெற்றோர் பிச்சனூர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். கடந்த 2-ந் தேதி குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. மணமகன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

ஆனால் தான் காதலித்த நடராஜனை கைப்பிடிக்க முடியவில்லையே என்று வருந்திய துர்கா கடந்த 6ந் தேதி மாலை முன் கணவன் வீட்டைவிட்டு ஓடினார். அக்கம்பக்கத்தில் உள்ள தோழிகள் வீட்டுக்கு சென்றிருப்பார் என வீட்டில் உள்ளோர் நினைத்திருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் துர்கா வீட்டுக்கு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்திலும், தோழிகள் வீட்டிலும் விசாரித்துள்ளனர். இருப்பினும் துர்கா குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து துர்காவின் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன புதுப்பெண் துர்காவை தேடி வந்தனர்.

இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய துர்கா, 7 ந் தேதி காலையின் தனது காதனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் பரதராமி அருகே உள்ள வீரிசெட்டிபல்லி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது போலீசாரும், உறவினர்களும் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை குடியாத்தம் வந்துள்ளனர். போலீசார் அவர்களை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்திற்கு வந்தனர். அப்போது துர்கா போலீசாரிடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன்தான் வாழ்வேன் என கூறினார். இதனையடுத்து அவர்களை போலீசார் குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இணையத்தில் பட்டைய கிளப்பும் ” பாம்பு சட்டை ” டீசர்!

உலகின் அழகான பெண் இவர் தான்: மனம் திறந்த டிரம்ப்

அமெரிக்காவில் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அடுத்தாண்டு பதவி ஏற்க உள்ளார்

இதைத் தொடர்ந்து அவர் தொடர்பான பல செய்திகள் இணையத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் டிரம்ப் உலகின் அழகான பெண் செர்பியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை Ana Ivanovic தான் என கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் டிரம்ப் வணீக முதலீடு தொடர்பாக ஆலோசிக்க செர்பியா நாட்டு பிரதமர் Ivica Dacic க்கை சந்தித்து 15 நிமிடம் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் டென்னிஸ் வீராங்கனை Ana Ivanovic உடன் சந்திப்பை முடித்த அவர், உலகின் மிகவும் அழகான பெண் Ana Ivanovic என்று கூறி அவரை வர்ணித்தார். அதன் பின் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.

தற்போது அவர் ஜனாதிபதி ஆகியுள்ள நிலையில் டிரம்ப் தொடர்பான பல புகைப்படங்கள் இணையத்தில் உலா வரும் நிலையில் இப்புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Ivanovic(29) ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான Schweinsteige என்பவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

trump-g

நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியவுள்ள ” எங்கிட்ட மோதாதே” படத்தின் டிரெய்லர்!

செல்வங்களை அருளும் விரதம்

பத்ரச்ரவஸ் என்ற மன்னன், சுரசந்திரிகா தம்பதியரின் மகள் சியாமபாலா. பத்ரச்ரவஸ் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். இவன் தனது மகளை சக்கரவர்த்தியான மாலாதரனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு முறை மகாலட்சுமி வயதான சுமங்கலி வேடத்தில், சுரசந்திரிகா அரண்மனைக்கு வந்தாள்.

சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி விரிவாக கூறி அதை கடைப்பிடிக்கும் படி கூறினாள். மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள். லட்சுமி தேவியை விரட்டியதால், சுரசந்திரிகாவும், பத்ரச்ரவஸ் மன்னனும் செல்வங்களை இழந்து, நாட்டையும் இழந்து வறுமை நிலைக்குச் சென்றனர்.

இதைக்கேள்வி பட்ட சியாமபாலா, லட்சுமி தேவியை சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு தெரிந்து கொண்டாள். பின்னர் பக்தியுடன் அந்த விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள்.

லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோரும், அந்த விரதத்தை கடைப்பிடித்தனர். அதன் பிறகு சுரசந்திரிகா தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள்.

நாடாளுமன்றில் சாப்பாட்டால் பலரை கதி கலங்க வைத்த ஜனாதிபதி மைத்திரி!

இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளார்.

அதனை நிரூபிக்கும் வகையில் மற்றுமொரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றில் இன்று வரவு செலவுத்திட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால தனக்கான மதிய நேர உணவை வீட்டிலிருந்து கொண்டு சென்றுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் எளிமையான முறையில் அங்கு உணவருத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

இளம்பெண்ணிடம் இருந்து வெளியே வந்த ஆரஞ்சுநிற கட்டி என்ன? திடுக்கிடும் வீடியோ

பொதுவாக பெண்களின் வயிற்றில் கட்டி தான் இருக்கும், அதை சர்ஜரி செய்து டாக்டர்கள் வெளியே எடுப்பார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ஆனால் கலிபோர்னியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வலது கையில் 6 இன்ச் அளவுக்கு ஒரு கட்டி இருந்துள்ளது.

இந்த கட்டியை சர்ஜரி செய்து வெளியே எடுத்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த் கட்டி ஆரஞ்சு நிறத்தில் கொழகொழ என இருந்தது.

இதுகுறித்த வீடியோ ஒன்று யூடியூப் இணையதளத்தில் மூன்றே மணி நேரத்தில் 530,000 பார்த்துள்ளனர். இந்த வீடியோவை நீங்களும் பார்க்க வேண்டுமா? இதோ இந்த லிங்க்கை சொடுக்குங்கள்

Hip Hop தமிழாவின் “மீசைய முறுக்கு“ படத்தின் அழகிய பாடல் உங்களுக்காக!

பூலோகத்தில் மதிப்பை இழந்த அஷ்டமி, நவமி திதிகள்

சிவபெருமான் பூலோகத்திலிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அடிப்படைச் சக்திகளை, பாகுபாடு இல்லாமல் வழங்கச் சூரியன், சந்திரன் இருவருக்கும் தனிக் காலக்கணக்கை உருவாக்கினார். அதன்படி சூரியனும், சந்திரனும் தங்கள் பணியைச் செய்து வந்தனர். சிறிது காலத்திற்குப் பின்பு சந்திரன் தனது பணியைச் சரியாகச் செய்யாமல் அவ்வப்போது ஏமாற்றத் தொடங்கினார். இதனால் பூலோகத்தில் இருக்கும் உயிரினங்கள், சந்திரனிடமிருந்து தங்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் துன்பமடைந்தன.

இதை அறிந்த சிவபெருமான், சந்திரனை அழைத்து பணியை ஒழுங்காகச் செய்யும்படி அறிவுறுத்தினார்.

சந்திரனோ, ‘இறைவா! என்னுடைய தொடர் பணிக்கு இடையில், அவ்வப்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு இருந்தால் மட்டுமே தனது பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும்’ என்றார். இறைவனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

அதன்பிறகு சந்திரனின் பணிக்காலத்தில் சில மாற்றங் களைச் செய்தார் சிவபெருமான். சந்திரன் பணியின் இடையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியதுடன், பணி நேரத்தில் ஏமாற்றாமல் இருக்க, சந்திரனின் பணியை பார்வையிடுவதற்காகவும் சிலரை நியமிக்கவும் முடிவு செய்தார். அதற்காக 16 பேரை தோற்றுவித்து, அவர்களுக்கான பணி நேரத்தைத் சமமாகப் பிரித்து புதிய காலக்கணக்கை உருவாக்கினார்.

அந்தக் கணக்கின்படி சந்திரனுக்கு ஒருநாள் முழுவதும் எந்தப் பணியும் இல்லாமல் முழு ஓய்வு கொடுக்கப்பட்டது. சந்திரனின் ஓய்வுக்கு யாரும் இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ள ஒருவரை நியமித்து அவருக்கு ‘மறைமதி’ (அமாவாசை) என்று பெயரிட்டார்.

ஓய்வு நாளுக்குப் பின்பான 14 நாட்கள், சந்திரனின் பணிகளை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அதிகரித்தார் ஈசன். அந்த 14 நாட்களும், சந்திரனின் பணி நேரத்தை கவனிக்கவும், அவரது ஓய்வு நேரத்தை இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் 14 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்று பெயரிட்டார் சிவபெருமான்.

கடைசியாகச் சந்திரனுக்கு ஒரு நாள் முழுவதும் முழுநேரப் பணியளித்து, அன்றைய தினம் அவருடைய முழுநாள் பணியையும் பார்த்துக் கொள்வதற்குத் தான் தோற்றுவித்தவர்களில் மீதமிருந்த ஒருவரை நியமித்து, அவருக்குப் பூரணை (பவுர்ணமி) என்று பெயரிட்டார்.

சந்திரனின் முழுநாள் பணிக்குப் பின்பு, ஒவ்வொரு நாளும் அவருக்குச் சிறிது சிறிதாகப் பணி நேரத்தைப் பதினான்கு நாட்களுக்குக் குறைத்துக் கொண்டே வந்தார் சிவபெருமான். இந்த நாட்களுக்கு, முன் பகுதியில் சந்திரன் பணிநேரத்தைப் பெற்ற பதினான்கு பேருக்கும், அதே வரிசையில் சந்திரனின் பணிநேரத்தையே கொடுத்துப் பணி நேரத்தைச் சமன் செய்தார்.

பவுர்ணமி, இறைவன் தனக்கு மட்டும் ஒரு நாள் முழுவதும் பணி நேரத்தைக் கொடுத்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டது. அமாவாசை, தனக்குச் சந்திரனைப் பார்வையிடும் பணியைக் கொடுக்காமல், அவரின் ஓய்வுக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளும் பணியைக் கொடுத்ததை நினைத்து வருந்தியது. மற்றவர்கள், தங்களுக்குப் பணிநேரம் சமமாக இருந்தாலும், அமாவாசை, பவுர்ணமிக்கு மட்டும் ஒருநாள் முழுப்பணியாகவும், தங்களுக்குப் பகுதிப்பணிகளாக இரு நாட்கள் பணியும் கொடுத்து விட்டதை நினைத்துக் கவலையடைந்தன.

அவர்களின் கவலையை அறிந்த சிவபெருமான், ‘சந்திரனைப் பார்வையிடும் பணியைப் பெற்ற நீங்கள் அனைவரும், பூலோகத்தில் ‘திதி’ என்னும் பெயரில் அழைக்கப்படுவீர்கள்’ என்றார்.

சிவபெருமான் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அஷ்டமி, நவமி ஆகியோர் இறைவனின் பேச்சை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட இறைவன், அவர்களிடம் தான் சொல்வதைக் கவனிக்கும்படி சொன்னார்.

பின்னர் தொடர்ந்து, ‘அமாவாசையைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் வரிசைப் பெயரிலான திதியாகவும், அவை அனைத்தும் வளர்பிறைத் திதிகள் (சுக்லபட்சம்) என்றும் அழைக்கப்படும். இதுபோல் பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் பெயரில் தேய்பிறைத் திதிகள் (கிருஷ்ணபட்சம்) என்றும் அழைக்கப்படும். பூலோகத்தில் இந்த நாட்களில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களுக்கும் உங்கள் பெயர்களும் பயன்படுத்தப்படும். அதன் மூலம் தங்களுக்குப் பூலோகத்தில் மதிப்பு கிடைக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போதும் ஈசனின் பேச்சைக் கவனிக்காமல் அஷ்டமி, நவமி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு கோபமடைந்த சிவபெருமான், அவர்களைப் பார்த்து, ‘நான் உங்கள் பணியைப் பற்றியும், பூலோகத்தில் உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் சிறப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களை எச்சரித்தும், அதைக் கண்டு கொள்ளவில்லை. எனவே மக்கள் உங்கள் இருவரையும் விலக்கி வைப்பார்கள். அந்த நாட்களில் எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள்’ என்று சாபமிட்டார்.

அஷ்டமியும், நவமியும் கவலையடைந்து, ஈசனிடம் சாபத்தைத் திரும்பப் பெற வேண்டினர். ஆனால் இறைவன் மறுத்து விட்டார்.

விமோசனம்

பூலோக மக்கள், அஷ்டமி, நவமி திதி நாட்களை எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தாமல் விலக்கியே வைத்தனர். பூலோகத்தில் தங்களிருவருக்கும் மதிப்பில்லாமல் போனதை நினைத்து இருவரும் கவலையடைந்தனர்.

தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விடுபட எண்ணிய அவர்கள் இருவரும், தங்களது ஓய்வு நேரத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘அஷ்டமி, நவமி திதிகளே! நான் உங்களுக்கு கொடுத்த சாபத்தில் இருந்து விடுவிக்க முடியாது. நீங்கள் இருவரும் விஷ்ணுவை சந்தித்து உங்கள் குறைகளைக் கூறுங்கள், உங்களுக்கு வேறு ஒரு நல்ல பலன் கிடைக்கலாம்’ என்று அருளினார்.

அதன்படி அஷ்டமி, நவமி திதிகள் விஷ்ணுவை வழிபட்டு வரத் தொடங்கினர். அவர்கள் முன்பாக தோன்றிய விஷ்ணு, ‘சிவபெருமான் கொடுத்த சாபத்தில் இருந்து உங்களை விடுவிக்க என்னாலும் முடியாது. அதே வேளையில் பூலோகத்தில் உங்களுக்கும் நல்ல மதிப்பு கிடைக்க என்னால் உதவ முடியும். அதற்கு தாங்கள் இருவரும் பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். உங்களால் முடியுமா?’ என்றார்.

‘இறைவா!, பூலோகத்தில் எங்களுக்கு இருக்கும் அவப்பெயர் நீங்கி, நல்ல மதிப்பு கிடைத்தால் போதும். அதற்காக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வேண்டுமானாலும் நாங்கள் காத்திருக்கத் தயார்’ என்றனர்.

அதைக் கேட்ட விஷ்ணு, ‘வரும் காலத்தில் பூலோகத்தில் நிகழவிருக்கும் என்னுடைய இரு அவதாரங் களுக்குப் பின்பு, உங்களிருவருக்கும் ஆண்டுக்கொருமுறை நல்ல மதிப்பு கிடைக்கும். அதுவரைப் பொறுமையுடன் காத்திருங்கள்’ என்று சொல்லி மறைந்தார்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணு, சித்திரை மாதம், வளர்பிறை நவமி திதியில் ராமனாக அவதாரம் செய்தார். அந்த நவமியில் பிறந்ததால் அவர் பல துன்பங்களை அடைய நேர்ந்தது. என்றாலும் ராமன் பிறந்த திதி என்பதால் பின்னாளில் ‘ராம நவமி’ என்ற பெயரில் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.

ராம அவதாரத்திற்கு பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஆவணி மாதம், தேய்பிறையில் அஷ்டமி திதியில் விஷ்ணு கண்ணனாக அவதாரம் எடுத்தார். பிறந்த உடனேயே பெற்றோரைப் பிரிய நேர்ந்தாலும், அவர் மனித வாழ்க்கைக்கான அறிவுரைகளை வழங்கி கண்ணன் உயர்ந்து நின்றார். கண்ணனின் பிறப்பால் அஷ்டமி திதியும் நன் மதிப்பைப் பெற்றது.

சிவபெருமானால் கொடுக்கப்பட்ட சாபத்திலிருந்து முழுமையாக விடுபட முடியாவிட்டாலும், விஷ்ணுவின் அவதாரங்களால் தங்களுக்குக் கிடைத்த தனிச்சிறப்பை நினைத்து அஷ்டமி, நவமி திதிகள் மகிழ்ச்சியடைந்தன.

தங்களை விட மேலான நிலையிலிருப்பவர்கள் அறிவுரை வழங்கும்போது, அதனை காதுகொடுத்து கேட்க வேண்டும். அந்த அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் துன்பமும், அவமதிப்பும் வந்து சேரும் என்பதையே அஷ்டமி, நவமி திதிகளின் சாப- விமோசனக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.

அதிக வாக்குகளை பெற்றும் ஹிலாரி தோல்வியடைந்தார் ஏன்? அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அமெரிக்காவில் இடம்பெற்ற 45 ஆவது ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளின்டன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 5 கோடியே 99 இலட்சத்து 26 ஆயிரத்து 386 வாக்குகளை பெற்று 47.7 வீதத்தில் 232 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, ஹிலாரி கிளின்டனை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 5 கோடியே 96 இலட்சத்து 98 ஆயிரத்து 506 வாக்குகளை பெற்று 47.5 வீதத்தில் 290 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த தேர்தலில் ஹிலாரி கிளின்டன், டொனால்ட் டிரம்பினை விட 2 இலட்சத்து 27 ஆயிரத்து 880 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தாலும் தேர்தல் வாக்குகளில் டிரம்பினை விட குறைவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

51 மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தல் வாக்கெடுப்பில் தற்போது வரை வெளியாகியுள்ள 50 மாநிலங்களின் முடிவுகளில் 29 மாநிலங்களிலும் வெற்றிக்கண்ட டொனால்ட் டிரம்ப், தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள மிச்சிகன் மாநிலத்திலும் முன்னிலையில் உள்ளார்.மேலும் வெளியாகியுள்ள 50 மாநிலங்களின் முடிவுகளில் 21 மாநிலங்களில் மட்டுமே ஹிலாரி கிளின்டன் வெற்றிக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் நடைமுறைகள் என்ன? BBC

2017 ஆம் ஆண்டு ஜனவரியில், உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒரு புதிய தலைவரை பெற்றிருக்கும்- ஆனால் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறைகள் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது ?

அமெரிக்கா அதன் அதிபரை தேர்ந்தெடுக்கும் போது வெறும் நாட்டின் தலைவரை மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய அரசாங்கத்தின் தலைவரையும், இந்த உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய ராணுவத்தின் தளபதியையும் தேர்ந்தெடுக்கின்றது.

எனவே அது ஒரு முக்கிய பொறுப்பு. அது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

அதிபராக தகுதி பெற்றவர்கள் யார்?

அமெரிக்காவின் அதிபராவதற்கு நீங்கள் “இயற்கையான முறையில்” அதாவது அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும், குறைந்தது 35 வயதை கடந்திருக்க வேண்டும், மேலும் அங்கு 14 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்.

1933 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக இருந்த ஏறக்குறைய ஒவ்வொருவரும், ஆளுநராகவோ, செனெட்டராகவோ, ஐந்து நட்சத்திர ராணுவ தளபதியாகவோ இருந்துள்ளனர்.

கட்சியின் அதிபர் வேட்பாளராக நியமனமாவதற்கு முன் அல்லது ஊடகங்களின் கவனத்தை பெறுவதற்கும் முன் இந்த பதவிகளில் ஒன்றை வகித்திருந்திருக்கிறார்கள்.

அதிபர் தேர்தலின் வேட்பாளாராக குடியரசுக் கட்சியிலிருந்து ஒருவரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்படுவர்.

ஏன் ஹிலரியும் டொனால்ட் ட்ரம்பும்?

இரண்டு கட்சியிலும் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலத்திலும், கடல் கடந்த அமெரிக்கப் பிராந்தியங்களிலும் தொடர் தேர்தல்கள் நடத்தப்படும்; அந்த தேர்தல்கள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் வெற்றி பெறுபவர்கள், வேட்பாளார்கள் இறுதியாக தீர்மானிக்கப்படும், ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டில், வாக்களிக்க அதிகாரம் பெற்ற கட்சி உறுப்பினர்களை தங்களுக்கு ஆதரவாக பெறுவார்கள்.

அதிகப்படியான மாநிலத்தில் வெற்றி பெற்றால், இறுதி மாநாட்டில் அதிகப்படியான உறுப்பினர்களை அவர்களுக்கு ஆதரவாக பெறுவார்கள்.

2016 ஆம் ஆண்டில் ஜனநாயக கட்சியில் ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சியில் டொனால்ட் ட்ரம்பும் தான் அதிபர் வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர் மேலும் அவர்கள் அக்கட்சிகளின் அதிகாரபூர்வ வேட்பாளராக நியமிக்கப்பட்டனர்.

நவீன அமெரிக்க வரலாற்றில் மிகவும் செல்வாக்கற்ற இரண்டு அமெரிக்க அதிபர்கள் இவர்கள்தாம்.

வர்ஜீனியாவின் செனெட்டர், டிம் கெயினை ஹிலரியின் துணை அதிபர் வேட்பாளர்களாகவும், இந்தியானாவின் ஆளுனர் மைக் பென்ஸைக் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர்களாகவும், இரண்டு கட்சிகளும் தங்களின் கட்சி மாநாடுகளில் அறிவித்திருந்தனர்.

நவம்பரில் நடைபெறவிருக்கும் வாக்குபதிவு எவ்வாறு நடைபெறும்?

ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் அந்த மாநிலம் ஆதரவு தரும் அதிபர் வேட்பாளராக மாறுவார்.

538 உறுப்பினர்களை கொண்ட வெற்றியாளார்களை தீர்மானிக்கும் அமைப்பு, ’’தேர்தல் அவை’’ எனப்படும் ஆனால் அதில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பேர் போதும்.

ஆனால் ஒவ்வொரு மாநிலமும் சமமானது அல்ல எடுத்துக்காட்டாக கலிஃபோர்னியாவில், கனெக்டிகட் என்னும் மாநிலத்தை காட்டிலும் 10 மடங்கு மக்கள் தொகை அதிகம் எனவே அது இரண்டும் சமமான நிலையை பெறாது.

சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி ஒவ்வொரு மாநிலமும் இம்மாதிரியான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் நபர்களை கொண்டிருக்கும் ; எனவே மாநிலங்களுக்கிடையே அந்த எண்ணிக்கை மாறுபடும்.

மக்கள் நேரடியாக வாக்களித்து அதிபரை தேர்வு செய்வதில்லை அவர்கள் அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் நபர்களையே தேர்வு செய்கின்றனர்.

இங்கு தான் இது சுவாரஸ்யமானதாக மாறுகிறது!

நெப்ராஸ்கா மற்றும் மேயின் ஆகிய மாகாணங்களை தவிர, மற்ற எல்லா மாநிலங்களிலும், வெற்றி பெறும் நபர் அந்த மாநிலத்தின் அனைத்து வாக்களிக்கும் உரிமை பெற்ற நபர்களையும் பெறுகிறார் .

எடுத்துக்காட்டாக நியூயார்க்கில் வெற்றிபெறுபவர் அந்த மாநிலத்தின் அனைத்து 29 வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களையும் பெறுகிறார்.

ஆனால், வெற்றிபெற தேவையான 270 வாக்குகளை பெற , ஊசலாடும் மாநிலங்கள்தான் ( Swing states) அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆகையால் இந்த ஊசலாடும் மாநிலங்கள் என்றால் என்ன?

இரண்டு வேட்பாளர்களும் 270 வாக்காளர்களைப் பெற ஒரே சமயத்தில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற வேண்டும்.

இரண்டு கட்சிகளுமே சிறிய எண்ணிக்கையிலோ அல்லது பெரிய எண்ணிக்கையிலோ வாக்குகளை பெறுவர்.

குடியரசுக் கட்சிக்கு டெக்ஸாஸில் அதிக செல்வாக்கு உள்ளது எனவே அவர்கள் அங்கு அதிக பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து பணத்தை வீணடிப்பதில்லை.

அது போல ஜனநாயக கட்சிக்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் செல்வாக்கு அதிகம்.

 

பிற மாநிலங்கள் நிலைமாறும் மாநிலமாகவே உள்ளன. எனவே அங்கெல்லாம், எப்படி வேண்டுமென்றாலும் முடிவு மாறும்.

குறிப்பாக தேர்தல் அவையில், 29 வாக்குகளைக் கொண்ட ஃபுளோரிடா மாகாணம் 2000 ஆம் ஆண்டில் ஜார்ஜ் புஷ்ஷிற்கு ஆதரவாக அமைந்தது. தேசிய அளவில் ஒட்டுமொத்த வாக்குகளில் அவர் வெற்றிபெறவில்லை என்றாலும், உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கை அடுத்து அவர் தேர்தல் அவை அமைப்பில் வெற்றிபெற்றார்.

ஓஹையோ, வர்ஜீனியா, கொலரோடோ, வடக்கு கரோலினா மற்றும் நெவாடா ஆகியவை பிற “நிலைமாறும்” மாநிலங்கள் ஆகும்.

புதிய அதிபர் எப்போதிலிருந்து பணியாற்றத் தொடங்குவார்?

முடிவு தெளிவானதாக இருந்தால், வெற்றி பெற்ற வேட்பாளர், அமைச்சரவையை உருவாக்குவார் மற்றும் ஒரு முழுமையான கொள்கை திட்டத்தைத் தயாரிக்கத் தொடங்குவார்.

இதற்கிடையில் பதவிக்காலம் முடிந்த “செயல்படாத அதிபர்” தான் தனது பதவிக்காலம் மூலம் விட்டுச்செல்லும் சாதனைகளை வடிவமைப்பதிலும், பொதுவாக வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடைமைகளை எடுத்துச் செல்வதிலும், காலத்தை செலவழிப்பார்.

அமெரிக்க அரசியல் அமைப்பின்படி தேர்தலை அடுத்து வரும் ஆண்டின் ஜனவரி மாதம் 20ம் தேதி, வெற்றி பெற்றவர் அதிபராக பதவியேற்பார்.