புதிதாக துறவியாகினால் பணமா?

புதிதாக துறவியாக இணைபவர்களுக்கு ஓர் வாய்ப்பு ஏற்ப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும்,புதிதாக துறவியாக இணைபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 2,500 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படும்.

இதற்காக, 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.