மணல் விரியன் பாம்பின் வேட்டையாடும் தந்திரத்தை பாருங்கள்

நடமாடும் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட நால்வரை சுற்றிவளைத்த பொலிஸார்!

பம்பலப்பிட்டி பகுதியில் நடமாடும் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட நான்கு பேரை பொலிஸார் இன்று (15) காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் வேன் ஒன்றில் வைத்து கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவரே ஈடுப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்கள் 23 மற்றும் 28 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், மின்னேரியா, உடவளவ மற்றும் குண்டசாலை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்- ஐஸ்வர்யா பற்றிய ரகசியம் இதோ

தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறக்கும் நடிகர் தனுஷ், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தபோது, ஆரம்பத்தில் இதனை மறுத்து வந்தனர். ஆனால், திடீரென இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

தங்களது காதல் குறித்து தனுஷ் கூறியதாவது, லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில்தான் நான் படித்தேன்.

அப்போது ஐஸ்வர்யாவும் என்னோடுபடிச்சாங்க. என் சகோதரியும் ஐஸ்வர்யாவும் நல்ல தோழிகள். பள்ளியில் படிக்கும்போது நானும், ஐஸ்வர்யாவும்நட்பாகத்தான் பழகினோம்.

படிப்பு முடிந்து நான் சினிமாவுக்கு வந்த பின்பு, நீண்ட நாட்கள் நாங்கள்சந்திக்கவில்லை. துள்ளுவதோ இளமை படம் வெளியானபோது ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க.

ஒவ்வொருகாட்சியையும் புகழ்ந்தாங்க. எங்கள் நட்பு மீண்டும் தொடர்ந்தது. பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு அக்காவை பார்க்கவந்தபோது, என்னுடனும் நிறைய நேரம் பேசுவார்கள்.

காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்களையும் பார்த்து விட்டுபாராட்டினாங்க.

அந்த சமயங்களில்தான் எங்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் காதலாக மலர்ந்தது. வீட்டுக்குத்தெரியாமல் நீண்ட நாட்கள் காதலிச்சோம். பின்பு திருமணம் செய்துக்க முடிவெடுத்து, எங்கள் காதலை இரு வீட்டு பெற்றோரிடமும் சொன்னோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என கூறியுள்ளார்.

அனைத்துமே ஏமாற்றம் – ஆவேசமடையும் நாமல்!

முழு நாட்டையும் விற்று விட்டு இலாபம் தேடும் முயற்சிக்கு அடித்தளமாகவே இந்த வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது, என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.

வரவு செலவு திட்டம் தொடர்பான இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மகிந்த ஆட்சியின் போது அமைத்த அனைத்தும் தற்போது விற்கப்படுகின்றது. விற்பனை செய்வது என்பது இலகு, ஆனால் உருவாக்குவது என்பது கடினம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட அனைத்தும் இப்போது விற்கப்படுகின்றது.

மகிந்த ஆட்சியின் போது துறைமுக நகரத்தினை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சீன நாட்டிற்கு இலங்கையை விற்கின்றோம், என கூக்குரல் எழுப்பியவர்கள் இப்போது அதனையே செய்து வருகின்றார்கள்.

மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வகையிலேயே நல்லாட்சி செயற்பட்டு வருகின்றது. விவசாயம், கல்வி, அபிவிருத்தி உட்பட அனைத்து துறைகளிலுமே மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.

இளைஞர் யுவதிகள் இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தார்கள், ஆனால் அனைவருமே ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

நாட்டை அபிவிருத்தி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றுங்கள் எனவும் நாமல் கேட்டுக்கொண்டார்.

​பாலியல் சீண்டல் பற்றி பேசிய நமீதா

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன் என்று நமீதா ஒரு படவிழாவில் துணிவாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’. இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ,நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் நமீதா பேசும் போது ” இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சி. சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்,செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன .அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.

இந்தப் படம் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி ,அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.ஆம்.

நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக்கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக்கொள்கிறேன்.

ஒரு விஷயம் ,ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன.

நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது,நல்ல டியூஷன் மட்டும் கொடுத்தால் போதாது. நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்,அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள்,நிறைய பேசுங்கள் .இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள் இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன் .இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.

மீன்குழம்பும் மண்பானையும்

நடிகர் காளிதாஸ் ஜெயராம்
நடிகை ஆஷ்னா சாவேரி
இயக்குனர் அமுதேஸ்வர்
இசை டி.இமான்
ஓளிப்பதிவு லக்ஷ்மன்

இன அழிப்புக்கு தயாராகும் இலங்கையின் திக்.. திக் பயணம்! (காணொளி இணைப்பு)

அன்றாடம் தற்போது பகிரங்கமான முறையில் இனவாதம் பரப்பப்பட்டு வருகின்றது, அவற்றின் பின்னணியில் பிக்குமார்கள் இருந்து செயற்பட்டு வருவது ஆதார பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இன்று அநுராதபுரத்தில் பிக்குகள் தலைமையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, குறித்த கூட்டத்தில் இளைஞர் ஒருவர் உரை நிகழ்த்துகின்றார்,

அவரது உரை மேற்கண்டவாறு அமைகின்றது,

நாட்டில் முஸ்லிம் இனத்தவர் தற்போது இனவாதத்தினை பரப்பி வருகின்றார்கள், அவர்களை அடக்கி ஒடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு சிங்களவர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இது வரையில் பொறுத்திருந்தது போதும் அடித்து விரட்ட வேண்டும் அவர்கள் அனைவரையும், நாட்டில் தற்போது பள்ளிவாசல்கள் ஊடாக தீவிரவாதமானது கற்று கொடுக்கப்படுகின்றது, அதேபோல் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் தற்போது இலங்கையில் உள்ளனர்.

இன்னுமொரு பிரபாகரன் உருவாகும் வரையில் நாம் பொறுமையாக இருப்போமானால் சிங்களவர்களின் தலைகளை வெட்டி எடுக்கும் நிலை உருவாக்கப்பட்டு விடும் என்பதனை அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்.

சக்தி மிக்க சிங்கள இளைஞர்களே, அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள், உங்களுக்கு பலம் உள்ளது, தற்போது எனக்கு படைகள் அவசியமாகின்றது. எம்முடன் அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள்.

இந்த நாட்டினை கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம்கள் ஆக்ரமித்து கொண்டிருக்கின்றார்கள், அனைவரும் பொறுமையாக இருக்கின்றார்கள் இப்படியே இருந்தோமானால் இலங்கையில் இருந்து அனைத்து சிங்களவர்களும் அழிக்கப்படுவார்கள்.

என்றவாறு சிங்கள மக்களிடையேயும், இளைஞர்களிடையேயும் முற்றிலும் வெறி ஏற்படுத்தும் வகையில் அவர் உரை நிகழ்த்தி உள்ளார்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்ட ஓர் இடத்தில் இவ்வாறான உரையினை அவர் நிகழ்த்தியுள்ளார். இதனை கேட்டு கொண்டிருக்கும் இளைஞர்கள் மன நிலை எவ்வாறு அமையும், அடுத்த கட்டம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இது வரையில் வெளிப்படை இல்லை.

ஆனாலும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசு தரப்பு மௌனமாக இருப்பதும், அனுமதியும் கொடுத்து கொண்டிருப்பதும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இவற்றினை உடனடியாக பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமாகின்றது எனவும் கூறப்படுகின்றது.

இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத மர்மங்கள்

நன்மையளிக்கும் விஷ்ணு காயத்ரி மந்திரம்

காக்கும் கடவுள் என்று சிறப்பு பெயர் பெற்றவர் மகாவிஷ்ணு. வைணவ சமயத்தின் தலைவனாக விளங்கும் இவர், நீலநிற மேனியை கொண்டவர். வைணவ சமயத்தில் பரமாத்மாவை அடைவது எளிதான முறையாகக் கூறப்பட்டிருக்கிறது. இதில் விக்கிரக ஆராதனைக்கு முக்கியத்துவம் அதிகம். பரிசுத்தமான பக்தியுடன் பெருமாளிடம் சரணாகதி அடைந்தால், அகங்காரம் அழிந்து, ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிவிடுவது சாத்தியமாகும். இதுவே வைணவ சமயத்தின் தத்துவம்.

விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். விஷ்ணுவுக்கு நாராயணன் என்ற பெயரும் உண்டு. ‘நாரம்’ என்றால் ‘வெண்ணிற நீர்’, ‘அயனம்’ என்றால் ‘இடம்’ என்று அர்த்தம். வெண்மை நிற பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டவன் என்பதால் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார். வைணவ சமயத்தில் மந்திரங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை, அஷ்டாச்சரம் (எட்டெழுத்து), துவய மந்திரம் (சரணாகதி), சரமஸ்லோகம் என்பன. இவற்றில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

விஷ்ணு காயத்ரி மந்திரத்திலும் ‘நாராயணாய’ என்ற மந்திரம் வருகிறது. தினமும் இறைவழிபாடு செய்யும்போது, விஷ்ணுவின் மந்திரங்கள் பலவற்றை கூறி வழிபடுகிறோம். அதோடு விஷ்ணு காயத்ரி மந்திரத்தையும் உச்சரித்து வருவது மிகவும் நன்மையளிக்கும்.

விஷ்ணு காயத்ரி மந்திரம்

‘ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்’

– பரம்பொருளான நாராயணனை அறிவோம். வாசுதேவன் மீது தியானம் செய்வோம். விஷ்ணுவாகிய அவன் நம்மை காத்து அருள் செய்வான் என்பது இதன் பொருளாகும்.

விஷ்ணுவை வழிபடும் போது, தினமும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வரலாம். இந்த மந்திரத்தைச் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். உலக இன்பங்களை அனுபவிக்கலாம். மறுபிறவி நல்லவிதமாக அமையும். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்.

மனிதன் விட வேண்டிய 21 தீய குணங்கள்

ரஜினியெல்லாம் கருப்பு பணம் ஒழிப்பது குறித்து பேசவே கூடாது! (காணொளி இணைப்பு)

கருப்பு பண விவகாரத்தில் பிரபல இயக்குனர் அமீர் இந்திய பிரதமர் மோடியையும், ரஜினியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு இயக்குனர் அமீர் பேசியதாவது,

மோடி, அம்பானி போன்ற பணக்காரர்களின் ஆதரவோடு விளம்பரத்தின் மூலம் இந்திய பிரதமரானார்.

தற்போது, தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வழியில்லாமல் தான் கருப்பு பணம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

ஒரே இரவில் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவத்தார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சி என மாவீரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

இதுவரை எந்த விஷயத்திலும் குரல் கொடுக்காத ரஜினிகாந்த், தற்போது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன?

மேலும் கபாலி திரைப்பட டிக்கெட் அரசு நிர்ணயித்த விலைக்கு தான் விற்பனையானதா? அப்படியெனில், ‘கபாலி’ திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து ரஜினி கணக்கு காட்ட முடியுமா?

150 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கும் ரஜினி கருப்பு பணம் ஒழிப்புக்கு ஆதரவு தெரிவிப்பது அநியாயம் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

முருகப்பெருமானுக்கு யானை வாகனம்

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து தேவர்களை காத்து அருளினார் முருகப்பெருமான். இதற்கு பிரதிபலனாக, இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார்.

திருமணம் முடிந்ததும் தெய்வானையுடன் முருகப்பெருமான் திருத்தணியில் வந்து அமர்ந்ததாக கூறப்படுகிறது. தெய்வானைக்கு சீதனமாக ஐராவதம் யானை வழங்கப்பட்டதாக புராணம் கூறுகிறது.

எனவே திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது.

மிச்செல் ஒபாமா ஒரு குரங்கு: இனவெறி கருத்து கூறிய மேயரின் பதவிக்கு ஆபத்து

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமாவை வாலில்லா குரங்கு என விமர்சனம் கூறிய அந்நாட்டு பெண் மேயர் ஒருவரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய மூன்றாவது மனைவியான மெலினியா அந்நாட்டின் முதல் குடிமகள்(First Lady) என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

இது குறித்து மேற்கு வெர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறையின் இயக்குனரான Pamela

Ramsey Taylor என்பவர் சமூக வலைத்தளத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஆஹா, அமெரிக்க நாட்டிற்கு தற்போது ஒரு அழகான, நாகரீகமான முதல் குடிமகள்(மெலினியா டிரம்ப்) கிடைத்துவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாக வாலில்லா குரங்கு போன்ற தோற்றம் உடைய முதல் குடிமகளை(மிச்செல் ஒபாமா) பார்த்து மிகவும் சோர்வடைந்து விட்டேன்’ எனக் கருத்து கூறியுள்ளார்.

இயக்குனரின் இக்கருத்தை அந்நகர பெண் மேயரான Beverly Whaling என்பவரும் உற்சாகமாக வரவேற்று அக்கருத்தை மகிழ்ச்சியாக பலருடன் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் மற்றும் மேயரின் இனவெறி தொடர்பான இக்கருத்திற்கு தற்போது பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

மேலும், இருவரையும் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாகாணத்தில் உள்ள கருப்பின மக்கள் உள்ளிட்ட பலர் போராடி வருகின்றனர்.

ஆச்சர்யம் ஆனால் உண்மை: டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆனது ஒரு நாட்டிற்கு மட்டும் தெரியாது

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள தகவல் ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா குடிமக்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை என வெளியாகியுள்ள தகவல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த உலக நாடுகள் அனைத்தும் பரபரப்பாக அமெரிக்க தேர்தலை உணிப்பாக கவனித்து வந்தது அனைவரும் அறிந்தது தான்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக அரசியல் பின்னணி இல்லாத டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது உலக நாடுகள் அனைத்திலும் முக்கிய செய்தியாக வெளியானது.

இதுமட்டுமில்லாமல், இன்றளவும் டொனால்ட் டிரம்பின் வெற்றியை தான் முக்கிய செய்தியாக உலக பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன.

ஆனால், ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா குடிமக்களுக்கு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது இதுவரை அந்நாட்டு அரசு தெரியப்படுத்தாமால் ரகசியமாக வைத்து வருகிறது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவில் உள்ள பி.பி.சி செய்தியாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பற்றி இங்குள்ள ஒருவருக்கும் எதுவும் தெரியாது.

கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டு 3 நாட்களுக்கு பிறகு தான் தனது குடிமக்களுக்கு வட கொரியா அரசு அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியது’ என அந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் வெறுப்பையும் அதிருப்தியையும் பெற்று வரும் வட கொரியா அரசு அங்கு ஒரு தனி உலகத்தையே நடத்தி வருகிறது.

வட கொரியா நாட்டில் தனியார் தொலைக்காட்சிகள் செயல்பட அனுமதி கிடையாது. இதனால், அரசு அதிகாரப்பூர்வமாக ஒளிப்பரப்பும் தகவல் மட்டுமே குடிமக்களுக்கு சென்றடையும்.

சில முக்கிய அதிகாரிகள் தவிர நாடு முழுவதும் இணையத்தளம் பயன்படுத்த குடிமக்களுக்கு தடை உள்ளதால் அவர்களால் இணையத்தளம் வழியாகவும் இச்செய்தியை அறிந்துக்கொள்ள முடியாது.

மேலும், வட கொரியா நாட்டிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர்கள் கைப்பேசி வைத்துக்கொள்ள அனுமதி இல்லாததால் அவர்கள் மூலமும் குடிமக்கள் செய்தியை தெரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை.

இதுபோன்ற ஒரு சூழலில் இதுநாள் வரை வட கொரியா குடிமக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி யார் என்ற தகவல் தெரியப்படுத்தவில்லை என்பது பெரும் வேதனையான செய்தியாகும்.

மலம் கழிக்க ஆரோக்கியமான நேரம் எது?

இதர கடன் பிரச்சனைகளை விட, இந்த காலை கடன் பிரச்சனை தான் மனிதர்களை பாடாய்ப்படுத்தி விடும். எந்த சிரமும் இன்றி காலை கடனை கழிப்பவர்கள் தான் உண்மையில் புண்ணியம் செய்தவர்கள்.

இன்றைய ஸ்மார்ட் போன் டிஜிட்டல் யுகம், உணவு கலாச்சார மாற்றங்கள் போன்றவை மலம் கழித்தலில் பிரச்சனைகள், கோளாறுகளை உண்டாக்குகின்றன.

மலம் கழித்தலில் உண்டாகும் பிரச்சனைகள் உங்கள் ஆரோக்கியத்தை மெல்லே, மெல்ல கரையான் போல அரிக்க துவங்கும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

எது சிறந்த நேரம்?

நமது சிறுகுடல், முந்தய தினம், இரவு உண்ட உணவை செரிமானம் ஆனது போக கழிவை முதல் வேலையாக காலையில் தான் வெளியேற்ற தயாராகும். நீங்கள் கண் விழித்த முதல் 30 நிமிடங்களில் சிறுகுடல் கழிவுகளை வெளியேற்ற தயார் நிலையில் இருக்கும்.

சிரமமாக இருக்கிறதா?

காலை நீங்கள் கண்விழித்த உடன் முதல் வெளியாக செய்ய வேண்டியது மலம் கழிப்பது தான். ஒருவேளை மலம் கழிப்பதில் சிரமமாக உணர்ந்தால், ஒரு கப் காபி, இதமான சுடுதண்ணி, சுடுதண்ணியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

காலையில் மலம் கழிக்க முடியாவிட்டால்?

ஒருவேளை காலை வேளையில் மலம் கழிக்க முடியவில்லை, வரவில்லை, முயற்சித்தாலும் சிரமமாக இருக்கிறது எனில், கவலைப்பட வேண்டாம். தினமும் நீங்கள் சரியான நேரத்தில் மலம் கழிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

கோல்டன் ரூல்!

சிலருக்கு 8 மணிக்கு, சிலருக்கு காலை சிற்றுண்டி கழித்த அரைமணிநேரம் கழித்து, சிலருக்கு அலுவலகம் சென்ற பிறகு கூட மலம் கழிக்க வரலாம். தினமும் ஒரே நேரத்தில் நீங்கள் சீராக மலம் கழித்தல், உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இதை ஆங்கில மருத்துவ முறையில் கோல்டன் ரூல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

எத்தனை முறை இயல்பு?

ஒரு நாளைக்கு இரண்டில் இருந்து மூன்று முறை வரை மலம் கழித்தல் இயல்பு. இரண்டு நாளுக்கு ஒருமுறை அல்லது ஒரே நாளில் ஐந்து முறைக்கும் மேல் மலம் கழிக்க செல்லுதல் போன்றவை உங்கள் குடல் இயக்கம் மற்றும் செரிமானத்தில் ஏதோ மாற்றங்கள் உண்டாவதை உணர்த்துபவை.

எனவே, உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

 

மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் ஜீரண முத்திரை

செய்முறை :

பத்மாசனம் போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது.

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும்.

பயன்கள் :

சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

இணையத்தில் பலகோடி மக்கள் பார்த்து ரசித்த வீடியோ!

கட்டுக்கட்டாக பழைய நோட்டுகளை வைத்திருந்த பிச்சைக்காரர்! மாற்ற முடியாமல் அவஸ்தை…

கடந்த 8ஆம் தேதி முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு வசதி படைத்தவர்கள் முதல் , கீழ்த்தட்டு மக்கள் வரை அனைவரையும் பாதித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் தேவாஸ் பகுதியை சேர்ந்த கண்பார்வை தெரியாத பிச்சைக்கார முதியவர் ஒருவர் கிராமத்து தலைவரிடம் தான் வாழ்நாள் முழுதும் சம்பாதித்த தொகையை மாற்றித்தருமாறு கட்டுக்கட்டாக பணத்தை கொடுத்துள்ளார். அதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் வரை இருந்துள்ளது.

அந்த பிச்சைக்கார முதியவர் தன்னுடைய மேலும் சில சேமிப்புகளை தனது நண்பர்களிடம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார். பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகவே, பயந்து போன இவரது நண்பர்கள் அந்த பணத்தை இவரிடமே திருப்பி கொடுத்துள்ளனர்.

இந்த பார்வையற்ற முதியவருக்கு வங்கியில் கணக்கு இல்லாததால், இந்த பிரச்சனைக்கு வங்கி அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண முடிவு செய்துள்ளனர்.

பிக்குவுக்கும், பொலிஸாருக்கும் சட்ட நடவடிக்கை எடுப்பேன் :முதலமைச்சர்

மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரிடம் தகாத வார்த்தைகளையும் இனத் துவேச ரீதியாகவும் திட்டிய சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருதில் நேற்று இரவு (14) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

குறித்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்காதவன் என்ற வகையில் தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்திற்கு சிறுபான்மை சமூகம் இரு கரம் நீட்டி தயாராகவுள்ள நிலையில் இவ்வாறு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் இனங்களிடையே மீண்டும் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கிழக்கில் சிறுபான்மையினரை திட்டமிட்ட வகையில் ஒழிப்பதற்கு இனவாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனரா? என்ற சந்தேகத்தை இவ்வாறான தொடர் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன.

பெரும்பான்மையின தேரர் ஒருவர் நீதித்துறையின் செயற்பாடுகளை விமர்சிப்பதும் அதை மதிக்காமல் அதற்கு எதிராக செயற்பட முனைவதும் இலங்கையின் நீதிக்கட்டமைப்பையே கேள்விக்குட்படுத்தும் விடயம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதித்துறை கட்டமைப்பில் தமக்கு எதிராக அநீதிகள் இடம்பெறும் போது அதற்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கின்றது என்பதுடன் இந்த தேரர் வழக்கு தொடர்ந்த அரச ஊழியர் ஒருவரை அச்சுறுத்துகின்றார் என்றால் அவர் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் என்றே கூற வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் என்பதில்லை தேரராக இருந்தாலும் ஐயராக இருந்தாலும் பாதிரியாராக இருந்தாலும் மௌலவியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஆகவே நீதித்துறையின் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இந்த தேரரின் நடவடிக்கையினை கண்டிப்பதுடன் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த தேரர் கைது செய்யப்பட வேண்டும்.

அது மாத்திரமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் சக அரச ஊழியர் ஒருவரை தூற்றப்படுவதை பார்த்துக் கொண்டு அருகில் இருந்து கைகட்டி வாய்மூடி மௌனமாக இருப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் குறித்த அதிகாரிகள் மீதும் எவ்வித தயவு தாட்சணையும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொலிஸாரே சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை பார்த்தும் பாராமுகமாக இருக்கின்றார்கள் என்றால் எமது எதிர்கால இருப்புக்கும் பாதுகாப்புக்கும் என்ன உத்தரவாதம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இறக்காமத்தில் அண்மையில் சிலை வைக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக செயற்படும் சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவான நல்லாட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தயா கமகே பதவி விலக்கப்பட வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தியிருந்தேன்.

இவ்வாறான அரசியல்வாதிகளின் தவறான முன்னுதாரணங்களின் மூலமே இவ்வாறான நடவடிக்கைகள் பகிரங்கமாக அச்சமின்றி முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் .

ஆகவே சிறுபான்மை மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கி அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறி சமூகங்களிடையே மீண்டும் மோதலை ஏற்படுத்த முற்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்,

இனவாதம் பேசி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர்காய நினைப்பவர்களுக்கு எதிராக புதிய சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

அது மாத்திரமன்றி பௌத்த தேரர் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது பௌத்தர்கள் தொடர்பில் தவறான புரிதலை சர்வதேசத்தின் மத்தியில் ஏற்படுத்தும் என்பதையும் தௌிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கை, கால், முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்!

முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால்  நம்கண்களுக்கு அதிகம் தெரியாத பகுதி என்பதால், கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகளுக்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

நீர்ச்சத்துக் குறைவால் சருமம் வறண்டுபோவதால், இறந்த செல்கள் தேங்கி இப்பகுதிகள் கறுத்துவிடுகின்றன. மூட்டுத்தோல்பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும். மூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத் தை சீர்செய்ய முடியும். ரத்த ஓட்டம் சீரானால் கறுப்புத் திட்டுக்கள் மறையும். தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 – 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும்.

ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும். கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் அப்படியேவிட வேண்டும். பின்னர், தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். தேன் அதிக அளவு சேர்த்து, தினமும் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.