இலங்கையில் பாடசாலை நேரத்தில் போதையில் மிதக்கும் மாணவர்கள்! எந்த பாடசாலை தெரியுமா ?

athi
தமது பாட­சாலைக் கல்­வியை நிறைவு செய்­வ­தை­யிட்டு மது­பான விருந்து ஏற்­பாடு செய்த இவ்­வ­ருடம் உயர் தரப்­ப­ரீட்சை எழுதும் ஆறு மாண­வர்கள் நேற்று முன்­தினம் மாலைப் பொழுதை சிலாபம் பொலிஸ் நிலை­யத்தில் கழிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.
பாட­சாலைச் சீரு­டையில் இருந்த பாட­சாலை மாண­வர்கள் சிலர் மது போதையில் கூடாத பேச்­சுக்­களைப் பேசி­ய­வாறு முறை­யற்ற வகையில் நடந்து கொண்டு அய­ல­வர்­க­ளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் நிற்­ப­தாக பொலிஸ் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­திற்கு சிலாபம் வட்­டக்­களி பிர­தேச மக்கள் வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து சிலாபம் பொலிஸார் அப்­பி­ர­தே­சத்­திற்குச் சென்­றுள்­ளனர்.
இதன் போது ஒரு வீட்டில் நின்ற இம்­மா­ண­வர்கள் அதிக போதையில் அய­ல­வர்­க­ளுக்கு தொல்­லை ஏற்­படும் வகையில் நடந்து கொண்­டி­ருந்­ததை அவ­தா­னித்து அம்­மா­ண­வர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சிலாபம் நகரின் பாட­சாலை ஒன்றில் கல்வி கற்கும் இம்­மா­ண­வர்கள் இம்­முறை உயர்தரப் பரீட்சை எழு­து­வ­தற்கு தயா­ராக இருந்­துள்­ள­தோடு தமது பாட­சாலைக் கல்வி நிறை­வ­டை­வ­தை­யிட்டு மாணவர் ஒரு­வரின் வீட்டில் விருந்து வைபவம் ஒன்றை ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கவும்,
அந்த விருந்­து­ப­சா­ரத்தில் கொண்டு வரப்­பட்ட மது­பா­னத்தை அருந்­தி­யதால் அம்­மா­ண­வர்கள் அதிக போதைக்கு உள்­ளாகி தாம் யார் என்­பதை மறந்து முறை­யற்ற வகையில் நடந்து கொண்­டதால் பிர­தே­ச­வா­சிகள் இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­ய­தை­ய­டுத்து அம்­மா­ண­வர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கைது செய்­யப்­பட்ட மாண­வர்கள் ஆறு பேரும் சிலாபம் பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்டு அங்கு அவர்­க­ளது பெற்­றோர் வரவழைக்கப்பட்டு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்து மாணவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.