ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.

வரும் 21ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன், அரசாங்கம் உயர்மட்டத் தலைவர்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jeffrey Feltman- ravi