வவுனியாவில் சிங்களவர்களுக்கு கல்வீடு தமிழர்களுக்கோ பொருத்துவீடு!

வவு­னியா மாவட்­டத்­தில் வாழும் சிங்­கள மக்­க­ளுக்கு 800 கல்­ வீடு­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அங்கு வாழும் தமிழ் மக்­க­ளுக்கு ஆயி­ரத்து 800 பொருத்து வீடு­கள் அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது என்று குற்­றஞ் சாட்­டப்பட்­டது.

வவு­னியா மாவட்­டத்­தின் பொஸ்­வே­வாப் பகு­தி­யில் உள்ள சிங்­கள மக்­க­ளுக்கு 800 கல்­ வீடு­கள் தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யால் அமைக்­கப்­ப­டு­கின்­றன. அவை ஒவ்­வொன்­றும் 5.5 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யில் அமைக்­கப்­ப­டு­கின்­றன.

அந்­தப் பகு­தி­யில் 2013ஆம் ஆண்­டின் இறு­தி­யில் வந்து குடி­யே­றிய குடும்­பங்­களே அதி­க­மாக வாழ்­கின்­றன. இவ்­வாறு வாழும் குடும்­பங்­ கள் 3 பிரி­வு­க­ளா­கப் பிரிக்­கப்­பட்டு ஒரு பிரி­வி­னர் முல்­லைத்­தீவு மாவட்­டத்­து­ட­னும் இன்­னும் ஓர் பிரி­வி­னர் வவு­னியா மாவட்­டத்­து­ட­னும் மற்­றொரு ­பிரி­வி­னர் அநு­ரா­த­பு­ரம் மாவட்­டத்­து­டனும் இணைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவ்­வாறு 3 மாவட்­டங்­க­ளின் பிர­தே­சங்­க­ளுக்­கும் பகுதி பகு­தி­யா­கக் காணப்ப­ டும் அனைத்து மக்­க­ளுக்­கு­மான வீட்­டுத் தேவையை நிறைவு செய்­யும் பொறுப்பு வவு­னியா மாவட்­டச் செய­ல­கத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ­நிலை­யில் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளும் தமிழ் மக்­க­ளில் கணி­ச­மா­னோ­ரும் எதிர்ப்­புத் தெரி­விக்­கும் பொருத்து வீடு­களை வவு­னியா மாவட்­டத்­தில் வாழும் ஆயி­ரத்து 800 குடும்­பங்­க­ளுக்கு வழங்­க­வுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இதனை வழங்­கும் நட­வ­டிக்­கையை மீள்­கு­டி­யேற்ற அமைச்சு முன்­னெ­டுத்­துள்­ளது.