மலையாள நடிகர் கலாபவன் மணியை கொலை செய்தது நடிகர் திலீப் தான் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர்.
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார் நடிகர் திலீப். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென் இந்திய சினிமாக்களில் தனது வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் கலாபவன் மணி.
அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் பைஜூ இன்று காலை அறிக்கை ஓன்றை வெளியிட்டார். அதில் நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு திலீப் தான் காரணம். அதற்கு முறையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று அவர் கூறியிருந்தார்.பின்னர் கொச்சி மாவட்டம் கொட்டாரகரையில் அமைந்துள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குநர் பைஜூவும் இன்று புகார் அளித்தார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.