ஐந்து வயது மகனின் தாய் தூக்கிட்டு தற்கொலை

காத்தான்குடி ஆரையம்பதி கோபாலகிருஷ்ணன் பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரையம்பதி கோபாலகிருஷ்ணன் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான குகன் ரொனிலா என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கு 5 வயதான மகன் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்கு இன்று அதிகாலை கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமையவே சடலத்தை மீட்டதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.