இன்று 12 மணித்­தி­யால நீர்­வெட்டு

water

இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை கோட்டை மற்றும் அதனை அண்­டிய இடங்­களில் 12 மணித்­தி­யால நீர்­வெட்டு  நிலவும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை தெரி­வித்­துள்­ளது.  முக்­கி­ய­மான திருத்தப் பணி ஒன்­றுக்­க­மை­வா­கவே குறித்த நீர் வெட்டு இடம்­பெறும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் மொர­கஸ்­முல்ல, ராஜ­கி­ரிய, ஒப­ய­சே­க­ர­புர, பண்­டார நாயக்க புர, கொஸ்­வத்த  மற்றும் கோட்­டையை அண்­டிய இடங்­களில் நண்­பகல் 2.00 மணி­ய­ளவில் இருந்து அடுத்த நாள்  அதிகாலை 2 மணிவரை நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.