யாழில் காற்றுடன் கூடிய பெருமழை!!

தென்மராட்சி – சாவகச்சேரி பகுதியில் இன்று கடும் காற்றுடன் கூடிய பெருமழை பெய்தது.

நீண்ட காலத்துக்குப் பின்னர் தென்மராட்சி பகுதியில் திடீரென கடும் காற்றுடன் கூடிய பெருமழை இன்று பெய்துள்ளது.

தொடர்ந்து சுமார் 45 நிமிட நேரம் மழை கொட்டித் தீர்த்த மழையால் பயன்தரு மரங்கள் பல இடங்களில் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், இன்னும் சில இடங்களில் வீட்டுக் கூரைகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன