பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனரை தந்திரமாக போலீஸில் பிடித்து கொடுத்த புத்திசாலி பெண்!!!

pp

 

 

 

 

 

 

 

ஆட்டோவில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த ஓட்டுனரை தந்திரமாக போலீஸிடம் பிடித்துக் கொடுத்துள்ளார் .

கிழக்கு டெல்லியில் ஒரு பெண் பணி முடித்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஆட்டோவில் செல்லும்போது அசதியில் உறங்கிவிட்டார்.

இதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட அந்த ஆட்டோ ஒட்டுனர், அந்த பெண்ணை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு கூட்டி சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

என்னை விட்டுவிடு என பல முறை கெஞ்சியும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த அந்த ஆட்டோ ஓட்டுனரிடம், சரி என்னை மறுபடியும் என் வீட்டுக்காவது கொண்டு சென்று விட்டு விடு என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சரி என அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்ற அந்த ஓட்டுனரை, நகர்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில், கூச்சலிட்டு அந்த ஓட்டுனரை போலீஸில் புத்திசாலித்தனமாக பிடித்துக் கொடுத்துள்ளார்