நாட்டின் மிக முக்கிய தருணம் இது: ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் பிரணாப் முகர்ஜி உரை

ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியதாவது:

நிதியமைச்சராக இருந்த போது ஜி.எஸ்.டி. உருவாக்கத்தில் நான் பெரிய அளவில் பங்காற்றியுள்ளேன். 14 வருட ஜி.எஸ்.டி பயணம், பயனை எட்டும் நேரம் வந்துள்ளது. ஜி.எஸ்.டி நாட்டிற்கு நன்மை பயக்கும் ஒன்று.

* ஜி.எஸ்.டி அறிமுகம் நாட்டின் வரலாற்றில் முக்கிய அத்தியாயம்.

* ஜி.எஸ்.டி அறிமுகம் நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறது.

* ஜி.எஸ்.டி.க்கு நான் கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கினேன்.

* ஜி.எஸ்.டி.க்கு ஒப்புதல் அளித்ததை பெருமையாக கருதுகிறேன்.

* ஜி.எஸ்.டி நாட்டின் எற்றுமதி திறனை மேம்படுத்தும். அரசியலமைப்பு சட்டப்படி ஜி.எஸ்.டி உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்