வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் தமிழர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இருக்காது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோ கணேசன், அந்த நாட்டு ஊடகத்திடம் இதை குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கு பாதுகாப்பான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் அரசியல் அந்தஸ்த்து கோரியிருந்த நிலையில் நாடு திரும்பும் இலங்கை அகதிகள், சட்ட மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து விசாரணைகள் நடத்தப்படும்.

ஆனால் தற்போது அவ்வாறான துன்புறுத்தல் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.