கஞ்சா கருப்புவை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய ஓவியா

தமிழக மக்களிடம் தற்போது பரபரப்பாக இருக்கும் ஒரு விடயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். அதில் கஞ்சா கருப்புவும் ஒரு போட்டியாளர் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். இவர் மட்டும் தான் 3 நாள் முடிந்தும் கலகலப்பாக இருக்கின்றார்.

இந்நிலையில் ஆர்த்தி, ஜுலி, காயத்ரி என அனைவருக்குமிடையே பிரச்சனைகள் வெடித்துவிட்டது, எல்லோரும் ஒருவரை ஒருவர் எதிரிகள் போல் பார்த்து வந்தனர்.

கஞ்சா கருப்பு மட்டுமே ஜாலியாக இருக்க, இன்று ஒளிப்பரப்பாகவுள்ள ஷோவில் ஓவியா கஞ்சா கருப்புவை பார்த்து ஷெட்-அப் என்று சொல்ல இந்த வார்த்தை அவரை மிகவும் கோபப்படுத்தியது.

உடனே அவர் எழுந்து கோபத்தில் திட்ட ஆரம்பிக்க, எல்லோருமே அதிர்ச்சி உறைந்து விட்டனர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் பெரும் ட்ரெண்டாகி வருகிறது. தினமும் வரும் எபிசோடுகளை பார்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள் வழக்கம் போல இந்த நிகழ்வுக்கும் மீம்ஸ் போட்டு இணையத்தை கலக்கி வருகிறது பிக் பாஸ்.