பெண்களுக்கு தற்போது பாதுகாப்பு  குறைவு – ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி நடித்துள்ள இந்தி படம் ‘மாம்’. தமிழில் ‘அம்மா’ என்ற பெயரில் திரைக்கு வரவுள்ளது. இப்பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக கணவர் போனிகபூருடன் நேற்று சென்னை வந்தார் ஸ்ரீதேவி. அப்போது அவர் கூறியது

கடந்த 2012ம் ஆண்டு இங்லிஷ் விங்லிஷ் படத்தில் நடித்தேன். சுமார் 4 வருடத்துக்கு பிறகு தான்இ ‘மாம்’ படத்தில் நடிக்கிறேன். இதற்கிடையில் எனது குடும்பம் குழந்தைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

நல்ல கதையாக இருந்தால் மட்டுமே ஏற்கிறேன். மகளுக்கும் தாய்க்கும் இடையேயான உணர்வுபூர்வமான கதையாக இது உருவாகியிருக்கிறது.

நான் 2 மகள்களுக்கு தாய். என் மகள்கள் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்வரை மற்ற தாய்மார்களைப்போல் நானும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.

பெண்கள் முன்னேற்றம் அடைந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்கிறார்கள்? ஆம் பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

தமிழில் நல்ல கதையாக வந்தால் நடிப்பேன். என் மகளும் தமிழில் நல்ல கதை அமைந்தால் நடிப்பார். இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.