ஊடகவியலாளன் மீது சிறீதரன் எம்.பி பொலிசில் முறைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் உத்தியோகபூர்வ பதவி முத்திரை மற்றும் நாடாளுமன்ற கடிதத்தலைப்பு மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மீது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரியவின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த முறைப்பாடு பாரிய குற்றவியல் செயலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எழுதிய கடிதத்திற்கும் தனக்கும் எந்த தொடர்புகளும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் 24 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் பா.உ சிறீதரன் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில், தன்னை அச்சுறுத்தும் வகையிலேயே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.