நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.இக் கொடியேற்ற வைபவத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்.

வடக்கின் பல பகுதிகளிலும் தீவுப் பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்தும் திரண்டு வந்திருந்த அடியார்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து பூசை அபிஷேகத்தை அடுத்து நாகபூஷணி அம்மன் திருவீதியுலா வந்தார். யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நயினாதீவுக்கு விசேட போக்குவரத்துச் சேவையும் தனியார் மினி பஸ் சேவையும் இடம்பெற்றன. ஆலயத்தில் தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.