தமிழகத்தில் பாகுபலிக்கு அடுத்த இடத்தை பிடித்த மோகன்லாலின் புலிமுருகன்

மலையாளத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகி ரூ.150 கோடி வரை வசூல் சாதனை செய்த படம் ‘புலிமுருகன்’. மோகன்லால் நடிப்பில் இந்த படம் மோகன்லாலில் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமாக அமைந்தது. இந்த படத்தை அதே பெயரில் தமிழில் 30 தொழில்நுட்பத்தில் உருவாக்கி வெளியிடவுள்ளனர்.

மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் என்பவர் தயாரித்திருந்தார். இவரே இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடுகிறார். இப்படத்தில் கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர் படமாக இது உருவாகி இருந்தது.

இப்படத்தை வைஷாக் என்பவர் இயக்கியிருந்தார் தற்போது தமிழில் ஆர்.பி.பாலா என்பவர் கதை, வசனம் எழுதியுள்ளார். கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். ஷாஜிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் வருகிற 16-ந் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 300 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர். ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மொழிமாற்று திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாவது ‘புலிமுருகன்’ என்பதே குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.