வழக்கறிஞர்கள் வழிபட வேண்டிய தெய்வம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும், குற்றம் குற்றமே! என்று வாதாடும் சம்பவம் நடந்ததால் வாதாடும் வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

நகரத்தார் ஆச்சிமார்கள் தாலாட்டுப் பாடும் பொழுது கட்டிலுக்கும் கீழே காத்திருப்பார் சொக்கலிங்கம், தொட்டிலுக்கும் கீழே துணையிருப்பாள் மீனாட்சி என்று பாடுவார். இதன் மூலம் சொக்கலிங்கம் – மீனாட்சி பெருமையை அறிந்து கொள்ளலாம்.