முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஞானசாரருடன் ஒப்பிடக்கூடாது : ராஜித கருத்து

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொது பல சேனாவின் ஞானசார தேரரைப் போன்று செயற்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனா ரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ராஜித மேலும் கூறுகையில்,

இந்த சிறிய நாட்டில் ஞானசார தேரர் பொலிஸாரின் கண்களில் தென்படாமல் மறைந்திருப்பதாயின் அதுவும் ஒரு திறமை. இவ்வாறு மறைந்திருப்பதற்கு அமைச்சர்கள் யாருடையதாவது ஒத்துழைப்பு இல்லாதிருக்க முடியாது. பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ் லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகின்ற மிக மோசமான வசனங்களை, ஞானசார தேரர் குற்றம்சாட்டும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வன் உள்ளிட்ட நபர்கள் சிங்களவர்களுக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியதில்லை. ஞானசார தேரர் குற்றச்சாட் டும் எவரும் கடைகளுக்குத் தீ வைத்ததா கவோ, சமயத் தலங்கள் மீது தாக்குதல் நட த்தியதாகவோ ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லை.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அவர் சார்ந்த உரிமைகளை தேவைகளை, கோரிக்கைகளை முன்வைக்க உரிமை இருக்கின்றது. அவர் ஞானசார தேரரைப் போன்று செயற்படவில்லை. ஞானசார தேரர் கூறும் நபர்களை கைது செய்வதற்கோ விசாரணை நடத்துவதற்கோ எந்த விதத் தேவையும் இல்லை என அமைச்சர் ராஜித தனது உரையில் குறிப்பிட்டார்.