தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கண்டுபிடித்த அரசாங்கத்திற்கு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
ஞானசார தேரரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வரையில் நாம் எந்தவிதமான சமாதானப் பேச்சுக்கும் இணக்கம் தெரிவிக்கமாட்டோம்.
அன்று பிரபாகரனைக் கண்டுபிடித்த இவர்களுக்கு இன்று ஞானசார தேரரைக் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கின்றது.
இதேவேளை, ஜனாதிபதி அனுமதித்தால் ஞானசார தேரரைக் கைது செய்வோம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.