தியாகி பொன் சிவகுமாரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு.

விடுதலைப் போராட்டத்தில் 1974 ஆம் ஆண்டு சயினைட் அருந்தி உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரின் 43 வது நினைவு தினம் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது

.உடும்பிராயில் உள்ள சிவகுமாரின் நினைவுத் தூபியில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மாகாணசபை உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

பொது சுடர் ஏற்றலோடு ஆரம்பமான நிகழ்வில் நினைவு தூபிக்கான மலர் மாலையினை அரசியல் பிரமுகர்கள் அணிவித்ததைத் தொடர்ந்து தியாகி பொன்.சிவகுமாரின் நினைவுரைகளும் இடம்பெற்றன.