இலங்கை செல்லவுள்ள ஜப்பானிய நிபுணர்கள் குழு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையைப் பார்வையிட ஜப்பானிய நிபுணர்கள் குழுவொன்று வரவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகானுமா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த மழை மற்றும் மண் சரிவினால் ஏற்பட்ட அனர்த்தினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து ஆராய்வதற்காக நாளை மறுநாள் சனிக்கிழமை இந்த நிபுணர்கள் குழு வரவுள்ளது.

மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தடுப்புகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ள இந்தக் குழு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளது.

எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுவுள்ளதாக ஜப்பானியத் தூதுவர் மேலும் கூறியுள்ளார்.