இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய டெல்லி தீஸ் ஹாசரி நீதிமன்றம், அவரது நண்பர் மல்லிகார்ஜுனவுக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது.
அதேசமயம், ரூ.5 லட்சம் பிணைத் தொகை செலுத்த டிடிவி தினகரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி டிடிவி தினகரன், மல்லிகார்ஜுன இருவரும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரன் நாளை காலை விடுவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.