இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஏழு சர்வதேச தேடல்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் கண்காணித்து வருவதாக கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இந்த அமைப்புகள் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
தற்காலிக மனிதாபிமான நாட்டு குழுவின் (Humanitarian Country Team) கூட்டம் இன்று கூட்டப்பட்டடுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு இந்த அமைப்பு ஆதரவளிக்கவுள்ளது. அத்துடன் சுகாதார கருவிகள், ஜெர்ரி கேன்கள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
தொழில்நுட்ப ஆதரவு, தகவல் முகாமைத்துவம், பகுப்பாய்வு மற்றும் மருத்துவ அணிகளை ஒருங்கிணைத்தல் ஆகிய உதவிகளையும் குறித்த குழு வழங்கவுள்ளது.
தேசிய அவசர நிவாரண சேவைகள் மையத்தின் உடனடி தேவைகளாக குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் பற்றிய பகுப்பாய்வுக்கு துணைபுரியும் செயற்கைக்கோள் படத்தைப் பெற சர்வதேச விண்வெளி மையத்தை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாடவுள்ளது.
முகில்கள் காரணமாக இந்த புகைப்படங்களை பெற்றுக் கொள்வதற்கு கடினமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
மின் இணைப்பு காரணமாக தொலைபேசி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவிசாவளை, புளத்சிங்கள, எஹலியகொட, எம்பிலிப்பிட்டிய, கஹவத்த, இரத்தினபுரி மற்றும் ருவன்வெல்ல ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, காலி, கம்பஹா, அம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய அனைத்து பாடசாலைகளும் கல்வி அமைச்சின் அறிவிப்பிற்கமைய ஜுன் 2ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.
அரசாங்கம் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் மக்களை வெளியேறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
காலி, அம்பாந்தோட்டை, கேகாலை, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 33 பிரதேச செயலகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெயர்வு அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.