ரிஷாத், ஹக்கீம், விக்கி, விஜ­ய­கலா, சிவா­ஜி­லிங்­கத்தை கைது செய்­யுங்கள்: ஞான­சார தேரர் சர­ண­டைவார்

பொது­ப­ல­சேனா உள்­ளிட்ட பௌத்த அமைப்­புக்கள் வலி­யு­றுத்தல்

நாட்டின் புராதன சொத்­துக்­க­ளையும் பெளத்த சிங்­கள உரி­மை­யையும் பாது­காக்க வேண்டும். அதற்­கா­கவே நாம் குரல்­கொ­டுக்­கின்றோம். அர­சாங்­கத்தை வீழ்த்த வேண் டும் அல்­லது புதிய அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும் என்­பது எமது நோக்கம் அல்ல.

நாட்டின் பெளத்த சிங்­கள உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும். எமது புரா­தன சொத்­துக்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். அதற்­காக ஒரு அடி பின்­வாங்­கவும் நாம் தயா­ராக உள்ளோம்.

இன்னும் சில காலம் அமைதி காக்­கவும் தயா­ராக உள்ளோம் என பொது­பல சேனா உள்­ளிட்ட சிங்­கள பெளத்த அமைப்­புகள் தெரி­வித்­தன.

பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காணா­விட்டால் அடுத்த சமு­தாயம் இந்த தீர்வை அடக்­கு­முறை மூலமே பெற்­றுக்­கொள்ளும். ஆகவே பொறு­மை­காப்­பது அச்­சு­றுத்­த­லா­னது எனவும் அந்த அமைப்­புக்கள் குறிப்­பிட்­டன.

பொது­பல சேனா அமைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ராஜ­கி­ரிய விகா­ரையில் இடம்­பெற்­றது. இதில் பொது­பல சேனா அமைப்­புடன் இணைந்து செயற்­படும் சிங்­கள ராவய, சிங்­கள அபி ஆகிய அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­கள்ட இணைந்து இந்த கருத்­துக்­களை முன்வைத்தனர்.

சிங்­கள ராவய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் கருத்து தெரி­விக்­கையில், இந்த நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் சக­லரும் வாழக்­கூ­டிய உரிமை உள்­ளது.

அதேபோல் நாட்டில் உள்ள தொல்­பொ­ருட்கள் அனைத்­தையும் பாது­காக்க வேண்­டி­யது நாட்டில் வாழும் சகல மக்­களின் கட­மை­யாகும். ஆனால் இன்று கிழக்கில் இடம்­பெறும் சம்­ப­வங்கள் மிகவும் மோச­மா­ன­தாக உள்­ளன.

பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் இல்­லா­ம­லேயே கிழக்கு மாகா­ண­சபை மிகவும் மோச­மா­ன­தாக செயற்­பட்டு வரு­கின்­றது. இது தொடர்பில் நாம் கேள்வி எழுப்பும் போது எம்மை இன­வா­தி­க­ளாக  சித்­த­ரித்து  நாட்டில் தவ­றான தோற்­றத்தை வெளி­ப­டுத்தி வரு­கின்­றனர்.

கடந்த சில கால­மாக நாட்டில் பௌத்தம் சிங்­களம் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. நாட்டின் புரா­தன தன்­மைகள், தொல்­பொ­ருட்கள், தேசிய வனம், பெளத்த கொள்கை என அனைத்தும் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எமது அடை­யாளம் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் இவற்றை நாம் தட்டிக் கேட்டால் எம்மை பெளத்த இன­வா­திகள் என விமர்­சித்து அடக்க முயற்­சிக்­கின்­றனர்.

எமது அடை­யா­ளத்தை அழித்து சிங்­கள பெளத்த மக்­களை அடக்­கு­வதா இந்த அர­சாங்கம் கூறும் நல்­லி­ணக்கம்? புரா­தன சொத்­து­களை பாது­காப்­பதன் மூலம் முஸ்­லிம்­களின் மனங்கள் காய­ம­டை­கின்­றன என்றால் பௌத்­தத்தை அழித்தால் சிங்­கள மக்­களின் மனங்கள் காயப்­ப­டாதா? எமது பக்க நியா­யங்­களை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அர­சாங்கம் கலந்­து­ரை­யா­டலின் மூலம் பிரச்­சி­னை­களை தீர்க்க அழைக்­கின்­றது. அதற்­க­மைய அமைச்சர் மனோ கணே­ச­னுடன் நாம் பேச்­சு­வாத்­தைக்கு சென்றால் இந்த நாடு சிங்­கள நாடு என்­பதை அவர் ஏற்­று­கொள்ள தயங்­கு­கின்றார்.

இந்த நாடு சிங்­கள நாடு என்­பதை மறுத்து எவ்­வாறு இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடியும்? ஆகவே இவர்கள் சிங்­கள மக்­களை புறக்­க­ணிக்கும் நிகழ்ச்சி நிரலை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

மேலும் ஞான­சார தேரரை இந்த நாட்டின் மிகப்­பெ­ரிய தீவி­ர­வா­தி­யாக சித்­த­ரித்து விட்­டனர்.

ஒரு தீவி­ர­வா­தியை கைது­செய்ய எவ்­வாறு பாது­காப்பு நகர்த்­தப்­ப­டுமோ அதேபோல் ஞான­சார தேரரை கைது செய்­யவும் மிகப்­பெ­ரிய திட்டம் தீட்­டி­யுள்­ளனர்.

200க்கும் அதி­க­மான பொலிசார் , விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் என மிகப்­பெ­ரிய பாது­காப்பு சுற்­றி­வ­ளைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது. பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்தே இந்த முயற்­சிகள் முறி­ய­டிக்­கப்­பட்­டன.

ஞான­சார தேரரின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது. அவரை கொலை­செய்ய மிகப்­பெ­ரிய திட்டம் வரை­யப்­பட்­டுள்­ளது. அவரை சட்டத்தின் மூலம் கைது செய்­யாது இர­க­சி­ய­மாக கைது­செய்து அவரை கொலை­செய்ய மிகப்­பெ­ரிய சதித்­திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ளது.

அவரை கொலை செய்து அதன் மூலம் 1989ஆம் ஆண்டு கல­வரம் போன்­ற­தொரு கல­வ­ரத்தை உரு­வாக்கி இன முறு­கலை ஏற்­ப­டுத்­தவே திட்டம் தீட்­டினர்.

இதன் பின்­ன­ணியில் அர­சாங்­கத்தின் தூண்­டுதல் உள்­ளது. பாது­காப்பு படை­களின் சிலரும் இதற்கு உடந்­தை­யா­கி­யுள்­ளனர்.

ஞான­சார தேரரை கைது செய்ய எந்த கார­ணமும் இல்லை. பிடி­யா­ணையும் இல்லை. நீதி அமைச்­ச­ருக்கு இந்த விடயம் தெரி­ய­வில்லை. ஆகவே ஒரு சிலரின் தனிப்­பட்ட தேவைக்­கா­கவே ஞான­சார தேரரை கைது­செய்ய முயற்­சிக்­கின்­றனர். அவரை கொலை­செய்­யவே இந்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்த செயல் அர­சாங்­கத்தை வீழ்த்தும் நோக்­கத்தில் எதிர்க்­கட்சி மேற்­கொள்ளும் சூழ்ச்­சி­யாக இருக்­கலாம். அல்­லது எதி­ர­ணியை பலவீனப்­ப­டுத்த அர­சாங்கம் மேற்­கொள்ளும் சூழ்ச்­சி­யாக இருக்­கலாம்.

அர­சாங்­கத்தை வீழ்த்த வேண்டும் அல்­லது புதிய அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும் என்­பது எமது நோக்கம் அல்ல.

நாட்டின் பெளத்த சிங்­கள உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும். எமது புரா­தன சொத்­துக்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். அதற்­காக ஒரு அடி பின்­வாங்­கவும் நாம் தயா­ராக உள்ளோம்.

இன்னும் சில காலம் அமைதி காக்­கவும் தயா­ராக உள்ளோம். அல்­லது ஞான­சார தேரரை கைது செய்தால் தான் எமது உரி­மைகள் கிடைக்கும் என்றால் அவரின் கைது தான் சிங்­க­ள­வர்­களின் உரி­மை­களை பாது­காக்க ஒரே வழி­முறை என்றால் அதற்­காக ஞான­சார தேரர் கைதா­கவும் தயா­ராக உள்ளார்.

ஆனால் ஞான­சார தேரரை கைது செய்ய முன்னர் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், ரவுப் ஹகீம், வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன், அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம் எம்.பி போன்­ற­வர்­களை முதலில் கைது­செய்ய வேண்டும்.

அதன்­பின்னர் ஞான­சார தேரர் தானாக சர­ண­டைவார். நாட்டில் தமிழ் முஸ்லிம் இன­வா­திகள் கருத்­துக்­களை முன்­வைக்கும் போது வேடிக்கை பார்க்கும் அரசாங்கம் எம்மை மாத்திரம் தண்டிக்க முயற்சிக்கின்றது.

பாராளுமன்றத்தில் அனைவரும் முஸ்லிம்களின் நியாயத்தை மாத்திரம் கருத்தில்கொண்டு செயற்படுகின்றனர். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக முன்வைத்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.

அவர் கூறுவதையே நாமும் கூறுகின்றோம். இப்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் அடுத்த சமுதாயம் இந்த தீர்வை அடக்குமுறை மூலமே பெற்றுக்கொள்ளும். ஆகவே பொறுமைகாப்பது அச்சுறுத்தலானது என்றார்.