பறக்கும் விமானத்தில் பிரபல்யம் அடைந்த மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விமான பயணம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பிரபல்யம் அடைந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரி, சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றே பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன்.

இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் இலங்கை ஜனாதிபதி அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலமுறை பயணம் செய்துள்ளேன். அவரும் அவரது மனைவி மைத்திரியும் இதே போன்ற எளிய முறையில் பயணித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போது, இலங்கை விமானப்படையின் கட்டளைத் தளபதிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

பல முறையில் மஹிந்தவின் பயணங்களுக்கு அவரது மைத்துனரினால் முழுமையான விமானங்கள் வழங்கப்பட்டதனை காண முடிந்தன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச ஆட்சியில் விசேட விமானத்தில் பல்வேறு நபர்கள் பயணங்களை மேற்கொண்டனர். இதற்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்டது. இதனால் நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டது.

எனினும் தற்போதைய ஜனாதிபதியின் பயணம் பலரால் பாராட்டப்பட்டுள்ளதென கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.