வவுனியா – மகாறம்பைக் குளத்தில் கடையுடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள கடையின் பிற்பகுதி கதவினை உடைத்து சுமார் 24,000 பெறுமதியான கமரா, 18,000 பெறுமதியான தொலைபேசி மற்றும் மீள்நிரப்பு அட்டைகள் என்பன களவாடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வவுனியா சாந்தசோலையினை சேர்ந்த பத்மநாதன் கேசர (வயது 17) என்ற சிறுவனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் குறித்த சிறுவனை ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.