டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ள ரணில் விக்ரமசிங்க!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ வியஜம் மேற்கொண்டு அமெரிக்கா செல்லவுள்ளார்.

எதிர் வரும் 28 ஆம் திகதி அமெரிக்கா செல்லும் பிரதமர், அந்நாட்டு அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை அடுத்து, இதுவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது அமெரிக்க பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.