உண்மையை கண்டறியும் குழுவின் அமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் என்பது இலகுவான காரியமல்ல. இந்த நிலையில் பல தடைகளையும் தாண்டி அரசாங்கம் அதனை அடைய முயற்சிக்கிறது என்று அவர் ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
ஜனநாயகம், நாட்டின் இறையாண்மை என்பவற்றின் அடிப்படையில் இந்த நல்லிணக்கத்தை அடைய அரசாங்கம் விரைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நல்லிணகத்துக்கான செயற்பாடுகளுக்காக இலங்கைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், சிலர் தமது சொந்த அரசியல் நலன்களுக்காக மக்களை பிழையான வழியில் இட்டு செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.