அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை : ரவி கருணாநாயக்க

கொழும்பு புறக்கோட்டைக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவலை அடுத்தே இன்று காலை அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது போதிராஜ மாவத்தையில் உள்ள அரிசி விற்பனை களஞ்சியங்களை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் மொத்த விற்பனையாளர்களையும் அவர் சந்தித்துள்ளார். இதன்போது அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று வர்த்தகர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நுகர்வோரை பாதுகாக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.