ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக்கும் சக மல்யுத்த வீரர் சத்தியவர்த்துக்கும் அரியானாவில் நேற்று திருமணம் நடைபெற்றது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 58 கிலோ பெண்கள் பிரிவில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் முதல் முறையாக இந்தியாவிற்கு வெண்கலத்தை பெற்று தந்தார். மல்யுத்த வீரர் சத்தியவர்த் 2010-ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர் ஆவார்.
இந்தியாவுக்காக குத்துச்சண்டை களத்தில் பதக்கங்களை குவித்த இவர்கள் இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. இந்நிலையில், அவர்களின் திருமணம் இன்று நேற்று சாக்ஷி மாலிக்கின் சொந்த மாநிலமான ஹரியானாவின் ரோத்தக் நகரில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மல்யுத்த வீரர் சுஷில் குமார் உட்பட பலரும் பங்கேற்று மனமக்களை வாழ்த்தினர்.
மேலும், பல்வேறு விளையாட்டை சேர்ந்த பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.