தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிணை மனு மீதான விசாரணை இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தனது மகளுக்கு சுகயீனம் காரணமாக தனக்கு பிணை வழங்குமாறு, விமல் வீரவங்ச கூறியிருந்தார்.
இருப்பினும்,மகளின் உடல் நலக் குறைவு தொடர்பில் போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், குறித்த பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதேவேளை, அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.