விராட் கோலி,சாக்‌ஷி மாலிக்,பாடகி அனுராதா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது: பிரணாப் முகர்ஜி வழங்கினார்

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுவதும் வழக்கம்.  இந்நிலையில் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது. பத்ம விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி மாளிகையில்  விருதுகளை வழங்கினார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பின்னணி பாடகி அனுராதா பட்வால், சேகர் நாயக், தீபா மாலிக், தீபா கர்மாகர், சாக்‌ஷி மாலிக், உள்ளிட்டார் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.

இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.