விவசாயிகள் இல்லை என்றால் நாடு அழிந்துவிடும்: அய்யாக்கண்ணு தகவல்!

டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னக நிதிகள் இணைப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் அறிவித்தல் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அரை நிர்வாணமாக கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அய்யாக்கண்ணு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தபடியே அவர் பேசியதாவது:

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகள் இல்லை என்றால் நாடு அழிந்து விடும். விவசாயிகள் அழிந்த பின்னர் வறட்சி நிவாரணம் அளித்து என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பினார்.

நேரம் தாழ்த்தாமல் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய வறட்சி நிவாரணத்தை உடனடியாக மத்திய அரசு கொடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் வங்கியில் பெற்ற கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.