புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளை கடுமையாக சாடும் சிங்கள ஊடகம்

ரியர் அட்மிரால் சரத் வீரசேகரவின் உரையை தடுப்பதற்கு ஈழப் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சரத் வீரசேகரவை ஓர் போர்க்குற்றவாளியாக போலிக் குற்றச்சாட்டு சுமத்தி, ஐக்கி நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என புலம்பெயர் தமிழ் சமூகம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைப் பேரவை இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

சரத் வீரசேகரவின் உரையை தடுக்க ஈழப் புலம்பெயர் சமூகத்தினர் இறுதி தருணம் வரையில் போராடியிருந்தனர்.

இதேவேளை, போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டு காரணமாக சரத் வீரசேகர அமர்வுகளிலிருந்து வெளியேறிச் சென்றதாகவும் ஈழப் புலம்பெயர் தமிழ் சமூகம் போலிப் பிரச்சாரம் செய்து வருவதாக சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.