காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, அக்மீமன மற்றும் இரத்கம தொகுதிகளுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.
பலபிட்டிய தொகுதியின் அமைப்பாளராக தயாரத்ன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்மீமன தொகுதியின் அமைப்பாளராக யு.ஜீ.டி. ஆரியதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். இரத்கம தொகுதியின் அமைப்பாளராக அமரசிறி குருகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த தொகுதியின் அமைப்பாளர்களாக முறையே சஜின் வாஸ் குணவர்தன, ரமேஷ் பத்திரன, மொஹான் பீ.டி சில்வா ஆகியோர் பணியாற்றியதுடன் அவர்களை நீக்கி விட்டு புதிய அமைப்பாளர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார்.