திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் பற்றிய அரிய தகவல்கள்!

1. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம்.

2. இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

3. வல்லாள மன்னனுக்கு மகனாக வந்தவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.

4. அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இது தான்.

5. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

6. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத் தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.

7. வல்லாள மன்னன் நினைவு நாளில் அவனுக்கு இன்றும் திருவண்ணாமலை ஈசன் திதி கொடுக்கிறார்.

8. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.

9. திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் பதிகத்திலும் 9-வது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.

10. திருவண்ணாமலை ஈசனை ‘தீப மங்கள ஜோதி நமோ நம’ என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

11. ஆடி மாதம் பூரம் தினத்தன்று உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது.

12. திருவண்ணாமலை தலத்தில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.

13. மகா சிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான் என்று புராணங்களில் குறிப்படப்பட்டுள்ளது.

14. கோவில்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் போது அஷ்ட பந்தனம் செய்வது தான் வழக்கம். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் தங்கத்தைத் கொண்டு சொர்ண பந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

15. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை வந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

16. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

17. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனத்தை ஒருதடவை செய்தாலே, அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தல புராணப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

18. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும்.

19. கார்த்திகை தீபம் தினத்தன்று அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஒன்று சேர கிரிவலம் வருவார்கள். அவர்களுடன் பக்தர்களும் சேர்ந்து வருவது புண்ணியமாகக் கருதப்படுகிறது.

20. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை ‘இறைவன் ஒருவனே’ என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

21. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணா மலை கோவிலில் பரணி நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள கால பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு அதை மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

22. இத்தலத்தில் அம்பாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் வித்தியாசமானவை. ஆடிப்பூரத்தன்று அம்பாள் சன்னதிமுன்பு தீ மிதி விழா நடத்துவார்கள். இது வேறு சிவாலயங்களில் காண முடியாதது.

23. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட தும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.

24. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ‘இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்’- இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

25. இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் – தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் – திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம் – பேய்க்கோபுரம், வடக்குக் கோபுரம் – அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

26. கோயிலுக்குள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பக்கம் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி – ரமணர் தலம் செய்த இடம், தரிசிக்கத் தக்கது.
27. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

28. விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

29. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

30. வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.