இலங்கை தூதரகம் முற்றுகை! சீமான் உள்ளிட்ட 300 பேர் சற்றுமுன் கைது

சென்னை – நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழக மீனவர் பிரிட்ஜோவின் மரணத்திற்கு நீதி கோரியும், இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்தும் குறித்த போட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் இன்று முன்னெடுத்திருந்தனர்.

சீமான் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் அன்பு தென்னரசன், இராவணன், சிவக்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு தமிழக மீனவர் விவகாரத்தில் மௌனம் காப்பதாகவும், உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதாதைகளையும் நாம் தமிழர் கட்சியினர் கையில் ஏந்தி இருந்தனர்.

இதன்போதே குறித்த 300 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.