மகத்துவம் தரும் ஒன்பது

எண்களில் சிறப்பு வாய்ந்தது ஒன்பது. ஒன்பதிற்கு ‘நவம்’ என்று பொருள். ஒன்பது கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வில் வளர்ச்சிக்கு அடிப்படை என்கிறது ஜோதிடம்.

நவக்கிரகங்கள்: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது.

நவ மணிகள்: கோமேதகம், நீலம், வைரம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்.

நவ உலோகங்கள்: பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தகரம், துத்தநாகம்.

நவ தானியங்கள்: நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை.

நவ விரதங்கள்: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேஸ்வர விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்.

நவ குணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.

நவ நிதிகள்: சங்கம், பதுமம், மகாதூபம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்.

ஒன்பது என்ற எண் எத்தனை மடங்கானாலும், அதன் கூட்டுத் தொகை ஒன்பதில் தான் வந்து சேரும்.

ஒன்பதில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் யோகமானவர்கள் தான். ஆளுமைத் தன்மையும், தன்னம்பிக்கையும் மிக்கவர்கள்.