அதிமுகவை அழிக்க அவதூறு பரப்புகிறார் பி.எச்.பாண்டின்: டிடிவி தினகரன் தாக்கு!

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பி.எச்.பாண்டியன் ஆகியோர் அதிமுகவை அழிக்கும் நோக்கத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்னும் ஓரிரு மாதத்தில் காணாமல் போய்விடுவார்கள். தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்வதற்காகவே அடிக்கடி செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.

பி.எச்.பாண்டியனை போல் பன்னீர்செல்வமும் அதிமுகவுக்கு துரோகம் செய்தவர். முதல்வர் பதவியில் தொடர முடியாமல் போனதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எதிர் காலத்தில் ஓ.பன்னீர்செல்வமும், பி.எச்.பாண்டியனும் அரசியலில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்று கூறினார்.

மேலும் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றும் முயற்சி எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் தேர்தல் ஆணையத்துக்கு அளித்த கடிதத்தில் பொதுச் செயலாளர் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் தாம் கையெழுத்திட்டதாகவும் கூறினார்.