மூடும் தலைக்கவசம் அணிவதற்கு தடை?

உந்துருளி செலுத்தும் போது பாதுகாப்பான தலைக்கவசம் அணிய வேண்டும் என கடந்த பெப்ரவரி 23-ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அனைத்து இலங்கை உந்துருளியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் செயலாளர் சிரந்த அமரசிங்க, இந்த வர்த்தமானி அறிவிப்பை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும் குறித்த வர்த்தமானி அறிவிப்புடன் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் 4 மாதங்களில் சந்தைகளில் அந்த தலைக்கவசத்திற்கான பற்றாகுறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த வர்த்தமானி அறிவிப்பில் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதற்கு தடை விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.